Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

மற்ற தேசிய இனங்களை விட, இந்திய அரசு ஆரிய இனவெறியுடன் தமிழ் இனத்தை ஒடுக்கும் போது, தமிழ் இனம் தமது விடுதலைக்காகத் தான் முதலில் போராட வேண்டும். போராடுகிறது.


ஆனால், ம.க.இ.க.வோ, இந்தியா முழுவதுமுள்ள தேசிய இனங்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்றுக் கூறிக்கொண்டு "புரட்சிகர இந்தியா" என்று பின்பாட்டுப் பாடுகின்றது.


இவ்வாறு அடையவே முடியாத இலட்சியத்தை கைக் கொண்டுள்ள ம.க.இ.க., தமது அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யும்?


அதற்காகத் தான் சட்டவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் முன் வைத்து சில வெற்றிகளை ஈட்டிக் காட்டுகின்றது. அதன் மூலம், தற்போது இருக்கின்ற அரச கட்டமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், அதன் மறுபுறத்தில், தமது அணிகளை "வெற்றி! வெற்றி!” எனவும், ”புரட்சிக்கு இன்னும் சில நாட்கள்" தான் எனவும் ஏமாற்றித் தக்க வைத்துக் கொள்கின்றது.


தமிழீழ மக்களின் தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை இழிவு படுத்திய ம.க.இ.க., தமிழகத்தில் தனிமைப்பட்டது. அதன் காரணமாகத் தான், மாவீரன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் பல சமரசங்களை செய்து கொண்டு "ஆள்பிடிக்க" முயன்றனர். இந்த "ஆள்பிடிக்கும்" தந்திரத்தை புரிந்து கொண்டு தான், அதனைத் தவறு என்று கண்டித்தார் ம.க.இ.க.வின் முன்னாள் கொ.ப.செ. இரயாகரன். அதன் பிறகு இருவருக்கும் இடையே உறவு முறிந்ததை இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கலாம்.


ம.க.இ.க.வின் தலைமையே சட்டவாத்தாலும், சீர்திருத்தவாதத்தாலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக தோழர் மூடக்கிழவன் கூறுகிறார். இதில் வியப்பொன்றும் இல்லை. ஓர் அடையக் கூடிய இலக்கில்லாத ஓர் அமைப்பு எவ்வாறு சீர்திருத்தவாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கி சீரழியும் என்பதற்கு ம.க.இ.க. ஓர் அனுபவரீதியான எடுத்துக்காட்டு.


அதனையே, ம.க.இ.க. அணிகளுக்கிடையேயான இந்த உரையாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது.


சூறாவளித் தோழர்களும், தோழர் மூடக்கிழவனும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இலக்கில்லாத, வாய்ச்சவடால் புரட்சியாளர்களான ம.க.இ.க.வை புறந்தள்ளிவிட்டு, தான் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கக் குரலாக நின்றொலித்து, தமிழ்த் தேச விடுதலைக்கு முன்னிற்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.


இக்கடிதங்களின் வாயிலாக நான் கேட்டுக் கொள்வதும் இதைத் தான்.


அன்புடன்,

அதிரடியான்

Labels: ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

தொலை நோக்கு பார்வையுடன் ஒர் அமைப்பை ஏற்படுத்தவதும், இலட்சியத்தை கட்டியமைப்பதும் தவறல்ல. உதாரணத்திற்கு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது ஓர் தொலை நோக்குப் பார்வை. தனக்கென ஆட்சி அதிகாரம் கொண்ட ஓர் தேசத்தின் பாட்டாளி வர்க்கம், தம்மைப் போலவே ஆட்சி செய்யும் அல்லது முதலாளிய ஆட்சிக்கு எதிராகப் போராடும் பிற தேசிய இன பாட்டாளி வர்க்கங்களை ஆதரிப்பதும், உதவுவதும் தான் பாட்டாளி வர்க்க சர்வத்தேசியத்தை உருவாக்கும்.

அதனை விடுத்து, தமக்கென ஒரு சொந்த தேசமே அமைத்துக் கொள்ளாத ஓர் பாட்டாளி வர்க்கம், முதலில் தாம் அதிகாரங்களைக் கைப்பற்றாமல், பிற தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும்?




ம.க.இ.க. பெரிதும் விரும்பும் "புரட்சிகர இந்தியா” அமைய வாய்ப்புள்ளதா? இந்தியச் சிறையில் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் தமது தேச விடுதலைப் போரை நடத்தி, அவர்களுக்கான தேசக் குடியரசுகளை அமைத்துக் கொண்ட பின்னர், அத்தேசக் குடியரசுகளின் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றியதன் பின், பல்வேறு தேசிய இனங்களின் குடியரசுகளும், அதன் பாட்டாளி வர்க்கங்களும் விரும்பி இணைந்து ஓர் 'புரட்சிகர இந்தியா' என்ற ஒன்றியத்தை நிறுவ முயலலாம்.




இது ஓர் தொலைநோக்காகத் தான் இருக்குமே ஒழிய, உடனடியான இலக்காக இதனைக் கைக்கொள்ள முடியாது.




ஏனெனில், இந்திய ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கபடுகின்ற தேசிய இனங்கள், தமது தேச விடுதலைக்காகப் போராடும் போது, சில தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு, தேச விடுதலைக்காகப் போராடும் மற்றொரு தேசிய இன விடுதலைப் போரை நசுக்கவும் வாய்ப்பு உண்டு.




அவ்வமயம், இரு தேசிய இனப் பாட்டாளிகளிடையே ஏற்படும் பிளவுகளும், மனக்கசப்புகளும் எளிதில் களைந்து விடாது. அவர்களை ஓரணியில் திரட்ட முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. இவ்வாறு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டிருக்கும், 'புரட்சிகர இந்தியா' என்ற எட்டாக்கனிக் கோட்பாட்டை தமது உடனடி இலக்காகக் கைக்கொள்ளும் ம.க.இ.க., தமது அணிகளை "நாளையே புரட்சி" என ஏமாற்றுகிறது என்பதைத் தவிர வேறென்ன செய்கிறது?




காவிரி நீரைத் தடுப்பதாலும், முல்லைப் பெரியாறு அணையை மறிப்பதாலும், கிருஷ்ணா நீரை தடுக்க அணைகள் கட்டுவதாலும், தமிழ்நாட்டில் உள்ள உழவர்கள், பாட்டாளிகள் பாதிப்பு அடைவார்களே என அங்குள்ள தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கம் இன்றைக்கு கவலைப்படவில்லை. அதிக எண்ணிக்கையில், தமிழ்நாட்டிற்குள் புகுவதால் தமிழ்நாட்டில் உள்ள பாட்டாளிகள் வேலை இழப்பார்களே, என வடநாட்டு, மலையாள பாட்டாளிகள் என்றைக்கும் எண்ணுவதில்லை.



இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினால், ‘தேசிய ஒருமைப்பாடு’ என்று கூச்சலிடுகிறது இந்திய ஆளும் வர்க்கம். அதனையே, ‘பாட்டாளி வர்க்க சர்வதேசியம்’ என்று மறுஒளிபரப்பு செய்கிறது ம.க.இ.க.




பல்வேறு இனக்குழுக்களும், வரலாற்றுத் தாயகங்களைக் கொண்ட தேசிய இனங்களும் கொண்ட இந்தியத் துணைக் கண்டப் பகுதியை, ‘இந்தியா’ என்ற ஒற்றை நாட்டுக்குள் அடக்கி, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தி தேசிய முதலாளிகளின் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது.

பார்ப்பனர்களின் இந்துத் தேசியம் – பனியாக்களின் இந்தித் தேசியம் ஆகியவை இணைந்து, புனைந்த ‘இந்தியா’ என்ற இந்தக் கட்டமைப்பு, சுரண்டலையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்களும், பனியாக்களும் வாழ்வதற்கு வாய்ப்பான கட்டமைப்பாக உள்ளது. சமற்கிருத வடிவிலான இந்தி மொழியின் மேலாதிக்கம், இந்தி பேசும் மக்களின் பெயரிரலான பண்பாட்டுத் திணிப்பு, என பிற தேசிய இன மக்களையும் ‘இந்தியன்’ என்ற செயற்கையான பெயரில் ஒன்றுபடுத்தும் முதலாளிய சந்தை உருவாக்கப் பணிகளை ஆளும் வர்க்கம் நோக்கமாகக் கொண்டது.

இந்திய ஆளும் வர்க்கம் இவ்வாறு உருவாக்கிய இந்தியா என்ற செயற்கை கட்டமைப்பில், மூவாயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த தமிழினம் போன்ற இனங்கள் சிறுபான்மை இனமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. மற்ற தேசிய இனங்களையும் இந்திய ஆளும் வர்க்கம் சுரண்டி வந்தாலும், இந்திய ஆளும் வர்க்கத்தில் முதன்மைக் கூட்டாளியாக உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் தமிழினத்தின் மீது தீராதப் பகை கொண்டுள்ளனர்.

தமிழர்களின் சிந்துவெளி நாகரிகத்தை அழித்த ஆரியப் படையெடுப்பு, இன்றும் அதன் பகை வெறி அடங்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான், இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்கள் என ஒட்டுமொத்த தமிழ் இனத்தையுமே பகையாகக் கருதுவதற்கு முதன்மைக் காரணம்.




(தொடரும்)


------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: , ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

மார்க்சியம் கற்றறிந்தவர்கள் இந்தியாவைப் பல் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றுத் தெளிவாக வரையறுக்கின்றனர். சுரண்டிப் பிழைக்கும் ஆரியப் பார்ப்பனர்களும், பனியா முதலாளிகளும் உருவாக்கிய ஓர் அடக்குமுறைக் கட்டமைப்பே இந்தியா எனப்படும் இந்நாடு. இப்படிப்பட்ட ‘இந்தியா’வை புரட்சியின் மூலம் கைப்பற்றி தூக்கியெறிவது தான் இலட்சியம் எனக் கொண்டிருக்கும் ம.க.இ.க.வினரை என்ன சொல்வது?

இங்குள்ள தேசிய இனங்கள் பலவும் தமக்கான தாயக உரிமையை, மொழி உரிமையை, இழந்து நிற்கின்றனர். இன்று தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்து உறவாடி ‘இந்தியா’ என்ற கட்டமைப்பை மேலும் வலுவாக்க முயல்கின்றனர். இந்திய ஆளும் வர்க்கம், ‘இந்தியா’வில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ‘தேசிய ஒருமைப்பாடு’ குறித்து கூப்பாடு போடுகின்றது.

இப்படிப்பட்ட சூழலில், இங்குள்ள புரட்சிகர சக்திகள் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகளின் சந்தையாக விளங்கும் ‘இந்தியா’ என்ற இக்கட்டமைப்பு உடைத்துச் சிதறச் செய்து, முதலாளிகளை பலவீனப்படுத்தி, இந்திய ஆளும் வர்க்கத்தை நிலைகுலையச் செய்ய வேண்டும்.

ஆனால், இப்படிப்பட்ட போலிக் கட்டமைப்பான இந்தியாவை, தமது ‘தாய்த் திருநாடு’ என்று பாரத மாதா பஜனை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் ம.க.இ.க.வினர் என்ன செய்கின்றனர்? ‘புரட்சிகர இந்தியா’ என்ற பெயரில், இந்திய ஆளும் வர்க்கங்களால் புனையப்படும் இந்தியத் தேசியத்திற்கு மார்க்சிய சாயமடித்துக் கொள்கிறது. பல் தேசிய இன உழைக்கும் மக்களும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.

ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் வடிவமான இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டுகள் தமது நெஞ்சில் சுமந்து வந்திருக்கும் தமிழின வெறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தித் திணிப்பின் போது சுட்டுக் கொன்ற போது வெளிப்பட்டது. ராஜீவ் என்ற வடநாட்டுப் பொறுக்கி, தமிழீழத் தமிழர்கள் மீது ஏவிய இனவெறிப் படுகொலை இந்திய அரசு மீண்டும் தான் யாரென அம்பலப்படுத்தியது.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் ‘வங்கதேசம் போல நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருப்போம்’ என்று சொல்லாமல் சொல்லி, இந்திய அரசிடம் கெஞ்சி நின்ற போதும் கூட, தமிழீழத்தை அழித்தொழிக்க இந்திய அரசு நடத்திய வன்மங்கள் யாரும் மறக்கமுடியாத்தல்ல.

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மீனவர்கள் சாவதை விரும்பி நிற்கிற இந்திய அரசு, தமது உண்மையான எதிரிகளாக தமிழர்களைத் தான் கருதுகின்றது. இது இந்திய ஆளும் வர்க்கத்தின் தன்மை. தமிழினத்தை போல் இந்திய அரசு எந்த இனத்தையும் இவ்வளவு கொடூரமாக அழித்தொழிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ் இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல போராட்ட வடிவங்கள் எடுத்துப் போராடிய போதும், இந்திய அரசினால் ஒடுக்கப்படும் இந்தியாவின் பிற தேசிய இனங்களில் உள்ள உழைக்கும் மக்களோ, சனநாயக சக்திகளோ தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கவில்லை, போராடவில்லை. மவுன சாட்சிகளாக நின்று வேடிக்கைப் பார்த்தனர். சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற போலிப் பொதுவுடைமை பேசும் இந்தியத் தேசிய வெறிக் கட்சிகள் தான், வலிந்து சென்று அவ்வாறு தோற்றமளிக்கும் சில போராட்டங்களை நடத்தியது.

உத்திரப்பிரதேசப் பாட்டாளி வர்க்கமும், கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்நாட்டுப் பாட்டாளி வர்க்கமும் தங்களை ஒரே ‘இந்திய’ நாட்டின் பாட்டாளிகளாக உணர்கின்றார்களா? தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் பீகார், ஆந்திர, மலையாளப் பாட்டாளிகள் குவிந்து கொண்டு, தமிழ் பாட்டாளிகளின் வேலைகளைப் பறிக்கின்றனர் என்பது கண்கூடு.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ‘புரட்சி’யை நிறைவேற்ற பணி செய்து வரும் எஸ்.ஓ.சி. குழுவினர், தமிழ்நாட்டிலேயே ஒரு பாட்டாளி வர்க்க சக்தியாக இன்னும் எழுச்சி பெற முடியவில்லையே ஏன்?

ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழ் இனத்திற்கு ஆபத்து சிக்கல்களின் போது உதவ நினைக்காத பிற தேசிய இனங்களின் தாயகத்தில் காலூன்றி, அங்கு கட்சி அமைத்து, அதன் பின்னர் அத்தேசிய இனத்தில் ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைக் கட்டியெழுப்பி, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ‘புரட்சி’ செய்யும் வரை, தமிழினம் அடிமைப்பட்டு தான் கிடக்க வேண்டும் என ம.க.இ.க. எண்ணுகிறதா?

தமிழ்நாட்டில் காலூன்றியதைப் போல ம.க.இ.க.வினர், அவர்கள் புனையும் ‘புரட்சிகர இந்தியா’வின் பிற தேசிய இனத் தாயகங்களில் கட்சி கட்டி எழுப்பி புரட்சி செய்ய குறைந்தபட்சம் 200 ஆண்டுகளாவது தேவை. இது நடக்க்க் கூடிய செயல் தானா?




(தொடரும்)


------------------------

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1

http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html

------------------------

Labels: , ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1


புரட்சிகர வணக்கம்.

உங்கள் பார்வையில் மட்டுமல்ல, முன்னாள் மற்றும் இன்னாள் ம.க.இ.க.வினர் பலரது பார்வையிலும் நான் ஒரு ‘ஓடுகாலி’ அல்லது ‘இனவாதி’யாகத் தான் குறிப்பிடப் படுவேன் என்பது எனக்கு நன்குத் தெரியும். இருந்த போதும், சூறாவளி இணையதளத்தில் நடக்கும் விவாதங்களை நான் கவனித்து வருபவன் என்ற முறையிலும், ம.க.இ.க.வினர் மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருப்பவன் ல் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சீர்திருத்தவாத, சட்டவாதப் பாதையில் செல்வதாகத் தாங்கள் குறைபட்டுக் கொள்கிறீர்கள். அது குறித்த விமர்சனங்களை எழுதி வருகிறீர்கள். இதே போன்ற விமர்சனங்கள், தங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல அமைப்பில் உள்ளவர்கள் பலருக்கும், ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி எழுந்து கொண்டே வருகின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி(எம்-எல்) – மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு[CPI-ML-SOC] எனப்படும் கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளான, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., வி.வி.மு., ம.உ.பா.மை., மற்றும், பத்திரிக்கைகளான பு.ஜ., பு.க., போன்றவை அனைத்து ‘புரட்சிகர’ அமைப்புகளுக்கும் இறுதி இலட்சியம் எது? இவர்களுடைய இறுதிக் கனவு எது? இவர்கள் அடைய நினைப்பது எதை?

‘புரட்சிகர சனநாயக இந்தியா’ – இது தான் அது.

அவர்களது பாணியில் சொன்னால், இந்தியாவைத் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், தரகு அரசியல்வாதிகளை அகற்றிவிட்டு, அரசு இயந்திரத்தை முடக்கி, புதிய ‘இந்தியா’யாவைப் படைத்து, ‘பாட்டாளிகள்’ தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுது ‘புரட்சி’கர இலட்சியம்.




இது அடையக்கூடிய இலட்சியம் தானா என்பதை முதலில் சிந்திப்போம். அப்பொழுது தான், இவர்களை சீர்திருத்த வாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கடித்த வேரைக் கண்டுபிடிக்க முடியும்.




(தொடரும்)



------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: ,