Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1


புரட்சிகர வணக்கம்.

உங்கள் பார்வையில் மட்டுமல்ல, முன்னாள் மற்றும் இன்னாள் ம.க.இ.க.வினர் பலரது பார்வையிலும் நான் ஒரு ‘ஓடுகாலி’ அல்லது ‘இனவாதி’யாகத் தான் குறிப்பிடப் படுவேன் என்பது எனக்கு நன்குத் தெரியும். இருந்த போதும், சூறாவளி இணையதளத்தில் நடக்கும் விவாதங்களை நான் கவனித்து வருபவன் என்ற முறையிலும், ம.க.இ.க.வினர் மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருப்பவன் ல் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சீர்திருத்தவாத, சட்டவாதப் பாதையில் செல்வதாகத் தாங்கள் குறைபட்டுக் கொள்கிறீர்கள். அது குறித்த விமர்சனங்களை எழுதி வருகிறீர்கள். இதே போன்ற விமர்சனங்கள், தங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல அமைப்பில் உள்ளவர்கள் பலருக்கும், ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி எழுந்து கொண்டே வருகின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி(எம்-எல்) – மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு[CPI-ML-SOC] எனப்படும் கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளான, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., வி.வி.மு., ம.உ.பா.மை., மற்றும், பத்திரிக்கைகளான பு.ஜ., பு.க., போன்றவை அனைத்து ‘புரட்சிகர’ அமைப்புகளுக்கும் இறுதி இலட்சியம் எது? இவர்களுடைய இறுதிக் கனவு எது? இவர்கள் அடைய நினைப்பது எதை?

‘புரட்சிகர சனநாயக இந்தியா’ – இது தான் அது.

அவர்களது பாணியில் சொன்னால், இந்தியாவைத் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், தரகு அரசியல்வாதிகளை அகற்றிவிட்டு, அரசு இயந்திரத்தை முடக்கி, புதிய ‘இந்தியா’யாவைப் படைத்து, ‘பாட்டாளிகள்’ தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுது ‘புரட்சி’கர இலட்சியம்.




இது அடையக்கூடிய இலட்சியம் தானா என்பதை முதலில் சிந்திப்போம். அப்பொழுது தான், இவர்களை சீர்திருத்த வாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கடித்த வேரைக் கண்டுபிடிக்க முடியும்.




(தொடரும்)



------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home