Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

தொலை நோக்கு பார்வையுடன் ஒர் அமைப்பை ஏற்படுத்தவதும், இலட்சியத்தை கட்டியமைப்பதும் தவறல்ல. உதாரணத்திற்கு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது ஓர் தொலை நோக்குப் பார்வை. தனக்கென ஆட்சி அதிகாரம் கொண்ட ஓர் தேசத்தின் பாட்டாளி வர்க்கம், தம்மைப் போலவே ஆட்சி செய்யும் அல்லது முதலாளிய ஆட்சிக்கு எதிராகப் போராடும் பிற தேசிய இன பாட்டாளி வர்க்கங்களை ஆதரிப்பதும், உதவுவதும் தான் பாட்டாளி வர்க்க சர்வத்தேசியத்தை உருவாக்கும்.

அதனை விடுத்து, தமக்கென ஒரு சொந்த தேசமே அமைத்துக் கொள்ளாத ஓர் பாட்டாளி வர்க்கம், முதலில் தாம் அதிகாரங்களைக் கைப்பற்றாமல், பிற தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும்?




ம.க.இ.க. பெரிதும் விரும்பும் "புரட்சிகர இந்தியா” அமைய வாய்ப்புள்ளதா? இந்தியச் சிறையில் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் தமது தேச விடுதலைப் போரை நடத்தி, அவர்களுக்கான தேசக் குடியரசுகளை அமைத்துக் கொண்ட பின்னர், அத்தேசக் குடியரசுகளின் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றியதன் பின், பல்வேறு தேசிய இனங்களின் குடியரசுகளும், அதன் பாட்டாளி வர்க்கங்களும் விரும்பி இணைந்து ஓர் 'புரட்சிகர இந்தியா' என்ற ஒன்றியத்தை நிறுவ முயலலாம்.




இது ஓர் தொலைநோக்காகத் தான் இருக்குமே ஒழிய, உடனடியான இலக்காக இதனைக் கைக்கொள்ள முடியாது.




ஏனெனில், இந்திய ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கபடுகின்ற தேசிய இனங்கள், தமது தேச விடுதலைக்காகப் போராடும் போது, சில தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு, தேச விடுதலைக்காகப் போராடும் மற்றொரு தேசிய இன விடுதலைப் போரை நசுக்கவும் வாய்ப்பு உண்டு.




அவ்வமயம், இரு தேசிய இனப் பாட்டாளிகளிடையே ஏற்படும் பிளவுகளும், மனக்கசப்புகளும் எளிதில் களைந்து விடாது. அவர்களை ஓரணியில் திரட்ட முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. இவ்வாறு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டிருக்கும், 'புரட்சிகர இந்தியா' என்ற எட்டாக்கனிக் கோட்பாட்டை தமது உடனடி இலக்காகக் கைக்கொள்ளும் ம.க.இ.க., தமது அணிகளை "நாளையே புரட்சி" என ஏமாற்றுகிறது என்பதைத் தவிர வேறென்ன செய்கிறது?




காவிரி நீரைத் தடுப்பதாலும், முல்லைப் பெரியாறு அணையை மறிப்பதாலும், கிருஷ்ணா நீரை தடுக்க அணைகள் கட்டுவதாலும், தமிழ்நாட்டில் உள்ள உழவர்கள், பாட்டாளிகள் பாதிப்பு அடைவார்களே என அங்குள்ள தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கம் இன்றைக்கு கவலைப்படவில்லை. அதிக எண்ணிக்கையில், தமிழ்நாட்டிற்குள் புகுவதால் தமிழ்நாட்டில் உள்ள பாட்டாளிகள் வேலை இழப்பார்களே, என வடநாட்டு, மலையாள பாட்டாளிகள் என்றைக்கும் எண்ணுவதில்லை.



இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினால், ‘தேசிய ஒருமைப்பாடு’ என்று கூச்சலிடுகிறது இந்திய ஆளும் வர்க்கம். அதனையே, ‘பாட்டாளி வர்க்க சர்வதேசியம்’ என்று மறுஒளிபரப்பு செய்கிறது ம.க.இ.க.




பல்வேறு இனக்குழுக்களும், வரலாற்றுத் தாயகங்களைக் கொண்ட தேசிய இனங்களும் கொண்ட இந்தியத் துணைக் கண்டப் பகுதியை, ‘இந்தியா’ என்ற ஒற்றை நாட்டுக்குள் அடக்கி, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தி தேசிய முதலாளிகளின் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது.

பார்ப்பனர்களின் இந்துத் தேசியம் – பனியாக்களின் இந்தித் தேசியம் ஆகியவை இணைந்து, புனைந்த ‘இந்தியா’ என்ற இந்தக் கட்டமைப்பு, சுரண்டலையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்களும், பனியாக்களும் வாழ்வதற்கு வாய்ப்பான கட்டமைப்பாக உள்ளது. சமற்கிருத வடிவிலான இந்தி மொழியின் மேலாதிக்கம், இந்தி பேசும் மக்களின் பெயரிரலான பண்பாட்டுத் திணிப்பு, என பிற தேசிய இன மக்களையும் ‘இந்தியன்’ என்ற செயற்கையான பெயரில் ஒன்றுபடுத்தும் முதலாளிய சந்தை உருவாக்கப் பணிகளை ஆளும் வர்க்கம் நோக்கமாகக் கொண்டது.

இந்திய ஆளும் வர்க்கம் இவ்வாறு உருவாக்கிய இந்தியா என்ற செயற்கை கட்டமைப்பில், மூவாயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த தமிழினம் போன்ற இனங்கள் சிறுபான்மை இனமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. மற்ற தேசிய இனங்களையும் இந்திய ஆளும் வர்க்கம் சுரண்டி வந்தாலும், இந்திய ஆளும் வர்க்கத்தில் முதன்மைக் கூட்டாளியாக உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் தமிழினத்தின் மீது தீராதப் பகை கொண்டுள்ளனர்.

தமிழர்களின் சிந்துவெளி நாகரிகத்தை அழித்த ஆரியப் படையெடுப்பு, இன்றும் அதன் பகை வெறி அடங்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான், இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்கள் என ஒட்டுமொத்த தமிழ் இனத்தையுமே பகையாகக் கருதுவதற்கு முதன்மைக் காரணம்.




(தொடரும்)


------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home