Tuesday, October 13, 2009

விவாதம் வேண்டாமாம்: ஓடுகிறது ம.க.இ.க.

விவாதம் வேண்டாமாம்: ஓடுகிறது ம.க.இ.க.


தமிழ் இனத்திற்கான உரிமையை வலியுறுத்திப் பேசும் அனைவரையும் ”இனவாதிகள்” என்று கொச்சைப் படுத்தும் கோயபல்சுகளின் கும்பலான ம.க.இ.க.வினர் தற்பொழுது மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளனர்.

ம.கஇ.க.வின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி நாம் தொடர்ந்து எழுதி வருகின்ற விமர்சனங்களை, தர்க்க ரீதியாக எதிர்கொள்ள துப்பில்லாத இவர்கள், ”விவாதத்திற்கு தயாரா?” என்று வாய்ச்சவடால் விடுத்தனர். சரி, விவாதிப்போம் என்றேன் நான்.

தொடக்கத்திலேயே இவர்கள் ஓடிவிடுவர் எனவே விவாதிப்பது வீண் என்றும், இவர்கள் நேரத்தை தான் விரயம் செய்வார்கள் என்றும் என்னை பல தோழர்கள் எச்சரித்தனர். நான் அவர்களது கூற்றுகளை பொருட்படுத்தாமல் எனது நேரத்தையும் ஒதுக்கி அவ்வப்போது அவர்களே எமக்களித்திருந்த பக்கத்தில், எனது கருத்துகளை பதிந்து வந்தேன். அவர்கள் மறுத்து எழுதினர். நானும் எதிர் கருத்துகளை முன் வைத்துக் கொண்டு தான் இருந்தேன். நேரமின்மையால் பாரிய நேர இடைவெளிகளில் பதில் அளித்தும் வந்திருந்தேன். பாதுகாப்புக் கருதி என்னுடைய பதில்களை எனது வலைப்பதிவிலும் எழுதி வந்தேன். இது அனைவருக்கும் தெரிந்தே வெளிப்படையாக நடந்தது.

கடைசியாக நான் பதிவிட்டது இதைத் தான்,

அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே… அவாளுக்கு ஏன் நாடு வேணும்… நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது…..


இந்த கருத்துகளால் இந்திய ஆளும் வர்க்கமும், அதன் உளவுத்துறையும் வேண்டுமானால் கலங்கியிருக்கலாம். ஆனால், கலங்கியது இவர்களது ”தோழமை” அமைப்பான ம.க.இ.க. தான். அதனால் தான் இவ்விவாதங்கள் மூலம் மேலும் பல எதிர்க் கருத்துகள் வெளியாகும் என புறக்கணித்திருப்பார்களோ என்று எண்ண தோன்றுகிறது.

விவாதம் செய்யவதற்கு முன்பிருந்தே இவர்களது நோக்கம் என்னவாக இருந்ததென்றால், நான் கூறும் கருத்துகளை விமர்சிக்கவோ, தர்க்க ரீதியாக எதிர்த்து வாதிடவோ இவர்களுக்கு அக்கறையில்லை. நேர்மையில்லை. மாறாக, நான் எந்த அமைப்பைச் சார்ந்தவன் என்பதை நோண்டுவதிலேயே இவர்களது அக்கறை வெளிப்பட்டது. இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறினால், உடனே அந்த அமைப்பைப் பற்றி அவர்கள் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்ட வசைகளை பொழிந்து விட்டு, ”உங்களுடன் விவாதிக்க விருப்பமில்லை” என்று ”மீசையில் மண் ஒட்டாமல்” ஓடிவிடுவது தான் இவர்களது திட்டமாக இருந்தது. இச்சூழ்ச்சியை எண்ணியே, இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறவில்லை.

இப்பொழுது, விவாதிக்க வெறுத்துப் போய் நான் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.ம.லெ.க.) அமைப்பைச சேர்ந்தவன் என்று இவர்களாகவே கற்பிதம் செய்து கொண்டு, ”என்னை புறக்கணிக்கிறோம்” என்ற அறிவிப்பின் பெயரில் மீண்டும் ஒருமுறை தானாகவே விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.

”கீற்று” இணையதளத்தின் விவாதத்தின் போது, இது போல இவர்கள் ஓடினர். அப்பொழுது நான் ”இவர்கள் ஓடியது ஏன்?” என்று கேட்டவுடன் ரோசம் பொத்துக் கொண்டு வந்து, ”விவாதத்திற்கு வா!” என்று அறைகூவினர். இப்பொழுது, விவாதத்திற்கு நான் வந்தும் கூட, ”புறக்கணிக்கிறோம்” என்ற பெயரில் விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.

இனி இவர்களுடன் நான் விவாதிக்கப் போவதில்லை. இவர்கள் எப்படி அழைத்தாலும், இவர்களுடன் இனி விவாதிக்கத் தேவையுமில்லை என நினைக்கிறேன். ”தமிழ்த் தேசியம்” என்ற சித்தாந்தம் தர்க்க ரீதியில் தவறானது என்று விவாதிக்க இவர்களிடம் சரக்கில்லை. இதற்குக் காரணமாக, உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இவர்களிடம் துளியளவும் இல்லாமையை சொல்லலாம். வறட்டுத்தனமே இவர்களை வழிநடத்துவதால் இவர்களிடம் நாம் விவாதிப்பதில் பயனுமில்லை என்று நினைக்கிறேன்.

இவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின், கருத்தியலைப் பின்பற்றி தேசிய இன விடுதலைப் புரட்சியை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள சீர்குலைவு அமைப்புகளே என நான் மீண்டும் பிரகடனப்படுத்துகிறேன்.. வங்கதேச விடுதலையின் போது இந்திய உளவுத்துறையினர் ”முக்தி வாஹினி” போன்ற போலி ”புரட்சிகர” அமைப்புகளை உருவாக்கியதைப் போல தமிழ்த் தேசிய இன விடுதலையை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள போலி புரட்சியாளர்களின் அமைப்பை மக்கள் கலை இலக்கியக் கழகம். அதனைப் பின்னின்று இயக்கி வருகின்ற ”இந்திய(?) கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தமிழ் மாநில அமைப்புக் கமிட்டி CPI ML SOC”, இந்திய உளவுத்துறையினருடன் நேரடித் தொடர்பில் இருப்பினும், அது வியப்புக்குரியதில்லை...
நாம் தொடர்ந்து இவர்களை அம்பலப்படுத்தி எழுதுவோம்.
விட மாட்டோம்
என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தான் மக்கள் கலை இலக்கியக் கழகம்

Labels: , ,

2 Comments:

At October 13, 2009 at 7:07 AM , Anonymous ம்ஹூம் said...

ஏம்பா, நாலு அரை டவுசருங்க்கூட விவாதம் பண்ணிட்டு அவங்கதான் ம.க.இ.கன்னு சொல்லுறியே...உனக்கே சிறிப்பு வறல?

 
At October 13, 2009 at 8:54 AM , Anonymous ஆல் இன் ஆல் அழகுராஜா said...

விவாதிக்க சரக்கு இல்லைன்னா இப்படிதான் புறக்கணிப்பு புரட்சி பண்ணுவா ம.க.இ.க அம்பிகள்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home