Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

மார்க்சியம் கற்றறிந்தவர்கள் இந்தியாவைப் பல் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றுத் தெளிவாக வரையறுக்கின்றனர். சுரண்டிப் பிழைக்கும் ஆரியப் பார்ப்பனர்களும், பனியா முதலாளிகளும் உருவாக்கிய ஓர் அடக்குமுறைக் கட்டமைப்பே இந்தியா எனப்படும் இந்நாடு. இப்படிப்பட்ட ‘இந்தியா’வை புரட்சியின் மூலம் கைப்பற்றி தூக்கியெறிவது தான் இலட்சியம் எனக் கொண்டிருக்கும் ம.க.இ.க.வினரை என்ன சொல்வது?

இங்குள்ள தேசிய இனங்கள் பலவும் தமக்கான தாயக உரிமையை, மொழி உரிமையை, இழந்து நிற்கின்றனர். இன்று தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்து உறவாடி ‘இந்தியா’ என்ற கட்டமைப்பை மேலும் வலுவாக்க முயல்கின்றனர். இந்திய ஆளும் வர்க்கம், ‘இந்தியா’வில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ‘தேசிய ஒருமைப்பாடு’ குறித்து கூப்பாடு போடுகின்றது.

இப்படிப்பட்ட சூழலில், இங்குள்ள புரட்சிகர சக்திகள் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகளின் சந்தையாக விளங்கும் ‘இந்தியா’ என்ற இக்கட்டமைப்பு உடைத்துச் சிதறச் செய்து, முதலாளிகளை பலவீனப்படுத்தி, இந்திய ஆளும் வர்க்கத்தை நிலைகுலையச் செய்ய வேண்டும்.

ஆனால், இப்படிப்பட்ட போலிக் கட்டமைப்பான இந்தியாவை, தமது ‘தாய்த் திருநாடு’ என்று பாரத மாதா பஜனை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் ம.க.இ.க.வினர் என்ன செய்கின்றனர்? ‘புரட்சிகர இந்தியா’ என்ற பெயரில், இந்திய ஆளும் வர்க்கங்களால் புனையப்படும் இந்தியத் தேசியத்திற்கு மார்க்சிய சாயமடித்துக் கொள்கிறது. பல் தேசிய இன உழைக்கும் மக்களும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.

ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் வடிவமான இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டுகள் தமது நெஞ்சில் சுமந்து வந்திருக்கும் தமிழின வெறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தித் திணிப்பின் போது சுட்டுக் கொன்ற போது வெளிப்பட்டது. ராஜீவ் என்ற வடநாட்டுப் பொறுக்கி, தமிழீழத் தமிழர்கள் மீது ஏவிய இனவெறிப் படுகொலை இந்திய அரசு மீண்டும் தான் யாரென அம்பலப்படுத்தியது.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் ‘வங்கதேசம் போல நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருப்போம்’ என்று சொல்லாமல் சொல்லி, இந்திய அரசிடம் கெஞ்சி நின்ற போதும் கூட, தமிழீழத்தை அழித்தொழிக்க இந்திய அரசு நடத்திய வன்மங்கள் யாரும் மறக்கமுடியாத்தல்ல.

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மீனவர்கள் சாவதை விரும்பி நிற்கிற இந்திய அரசு, தமது உண்மையான எதிரிகளாக தமிழர்களைத் தான் கருதுகின்றது. இது இந்திய ஆளும் வர்க்கத்தின் தன்மை. தமிழினத்தை போல் இந்திய அரசு எந்த இனத்தையும் இவ்வளவு கொடூரமாக அழித்தொழிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ் இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல போராட்ட வடிவங்கள் எடுத்துப் போராடிய போதும், இந்திய அரசினால் ஒடுக்கப்படும் இந்தியாவின் பிற தேசிய இனங்களில் உள்ள உழைக்கும் மக்களோ, சனநாயக சக்திகளோ தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கவில்லை, போராடவில்லை. மவுன சாட்சிகளாக நின்று வேடிக்கைப் பார்த்தனர். சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற போலிப் பொதுவுடைமை பேசும் இந்தியத் தேசிய வெறிக் கட்சிகள் தான், வலிந்து சென்று அவ்வாறு தோற்றமளிக்கும் சில போராட்டங்களை நடத்தியது.

உத்திரப்பிரதேசப் பாட்டாளி வர்க்கமும், கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்நாட்டுப் பாட்டாளி வர்க்கமும் தங்களை ஒரே ‘இந்திய’ நாட்டின் பாட்டாளிகளாக உணர்கின்றார்களா? தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் பீகார், ஆந்திர, மலையாளப் பாட்டாளிகள் குவிந்து கொண்டு, தமிழ் பாட்டாளிகளின் வேலைகளைப் பறிக்கின்றனர் என்பது கண்கூடு.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ‘புரட்சி’யை நிறைவேற்ற பணி செய்து வரும் எஸ்.ஓ.சி. குழுவினர், தமிழ்நாட்டிலேயே ஒரு பாட்டாளி வர்க்க சக்தியாக இன்னும் எழுச்சி பெற முடியவில்லையே ஏன்?

ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழ் இனத்திற்கு ஆபத்து சிக்கல்களின் போது உதவ நினைக்காத பிற தேசிய இனங்களின் தாயகத்தில் காலூன்றி, அங்கு கட்சி அமைத்து, அதன் பின்னர் அத்தேசிய இனத்தில் ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைக் கட்டியெழுப்பி, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ‘புரட்சி’ செய்யும் வரை, தமிழினம் அடிமைப்பட்டு தான் கிடக்க வேண்டும் என ம.க.இ.க. எண்ணுகிறதா?

தமிழ்நாட்டில் காலூன்றியதைப் போல ம.க.இ.க.வினர், அவர்கள் புனையும் ‘புரட்சிகர இந்தியா’வின் பிற தேசிய இனத் தாயகங்களில் கட்சி கட்டி எழுப்பி புரட்சி செய்ய குறைந்தபட்சம் 200 ஆண்டுகளாவது தேவை. இது நடக்க்க் கூடிய செயல் தானா?




(தொடரும்)


------------------------

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1

http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html

------------------------

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home