Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

மற்ற தேசிய இனங்களை விட, இந்திய அரசு ஆரிய இனவெறியுடன் தமிழ் இனத்தை ஒடுக்கும் போது, தமிழ் இனம் தமது விடுதலைக்காகத் தான் முதலில் போராட வேண்டும். போராடுகிறது.


ஆனால், ம.க.இ.க.வோ, இந்தியா முழுவதுமுள்ள தேசிய இனங்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்றுக் கூறிக்கொண்டு "புரட்சிகர இந்தியா" என்று பின்பாட்டுப் பாடுகின்றது.


இவ்வாறு அடையவே முடியாத இலட்சியத்தை கைக் கொண்டுள்ள ம.க.இ.க., தமது அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யும்?


அதற்காகத் தான் சட்டவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் முன் வைத்து சில வெற்றிகளை ஈட்டிக் காட்டுகின்றது. அதன் மூலம், தற்போது இருக்கின்ற அரச கட்டமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், அதன் மறுபுறத்தில், தமது அணிகளை "வெற்றி! வெற்றி!” எனவும், ”புரட்சிக்கு இன்னும் சில நாட்கள்" தான் எனவும் ஏமாற்றித் தக்க வைத்துக் கொள்கின்றது.


தமிழீழ மக்களின் தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை இழிவு படுத்திய ம.க.இ.க., தமிழகத்தில் தனிமைப்பட்டது. அதன் காரணமாகத் தான், மாவீரன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் பல சமரசங்களை செய்து கொண்டு "ஆள்பிடிக்க" முயன்றனர். இந்த "ஆள்பிடிக்கும்" தந்திரத்தை புரிந்து கொண்டு தான், அதனைத் தவறு என்று கண்டித்தார் ம.க.இ.க.வின் முன்னாள் கொ.ப.செ. இரயாகரன். அதன் பிறகு இருவருக்கும் இடையே உறவு முறிந்ததை இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கலாம்.


ம.க.இ.க.வின் தலைமையே சட்டவாத்தாலும், சீர்திருத்தவாதத்தாலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக தோழர் மூடக்கிழவன் கூறுகிறார். இதில் வியப்பொன்றும் இல்லை. ஓர் அடையக் கூடிய இலக்கில்லாத ஓர் அமைப்பு எவ்வாறு சீர்திருத்தவாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கி சீரழியும் என்பதற்கு ம.க.இ.க. ஓர் அனுபவரீதியான எடுத்துக்காட்டு.


அதனையே, ம.க.இ.க. அணிகளுக்கிடையேயான இந்த உரையாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது.


சூறாவளித் தோழர்களும், தோழர் மூடக்கிழவனும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இலக்கில்லாத, வாய்ச்சவடால் புரட்சியாளர்களான ம.க.இ.க.வை புறந்தள்ளிவிட்டு, தான் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கக் குரலாக நின்றொலித்து, தமிழ்த் தேச விடுதலைக்கு முன்னிற்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.


இக்கடிதங்களின் வாயிலாக நான் கேட்டுக் கொள்வதும் இதைத் தான்.


அன்புடன்,

அதிரடியான்

Labels: ,

3 Comments:

At October 8, 2011 at 2:23 AM , Anonymous Anonymous said...

ம.க.இ.க. போலவே, சூறாவாளி - மூடக்கிழவன் ஆட்களும் இந்தியத் தேசியத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள் தான்...

அவிங்கெல்லாம் இந்தப் பக்கம் வர மாட்டங்க.. நீங்க ஆகற வேலையப் பாருங்க சார்...

 
At October 12, 2011 at 5:15 AM , Anonymous redmeera said...

இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடாரம் என்பது உண்மை.ஆனால் இங்கு அனைத்து தேசிய இனங்களுக்கும் பொது எதிரியாக இருப்பவர்கள் மிகவும் சிறும்பான்மையாக இருக்கிற பார்ப்பனர்கள் தான். அதே வேலையில் உயர்சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கிற வர்த்தககாரர்கள் மற்றும் நில உடைமைக்காரர்களின் ஆதிக்கமும்,சுரண்டலும் நிலைத்து இருப்பதற்கு, பார்ப்பனியமும்,அதன் கலாச்சாரமும் தேவை.இந்த மூன்று அதிகாரவர்க்கம் தான் சாதியை வைத்து இருப்பதற்கு காரணம்.இந்த இரண்டாவது பிரிவில் இருக்கிற நிலயுடைமைக்காரர்கள் சில இடங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாகவும்,சில இடங்களில் உயர்ந்த சாதியாகவும் இருக்கிறது. இவர்களுக்கு தன்னுடைய தேசிய இனம் அழிக்கப்படுகிறது,தன்னுடைய கலாச்சாரம்,பழக்கவழக்கம் பாதிக்கப்படுகிறது என்பதைப்பற்றியெல்லாம் கவலைக்கிடையாது. தனது சொத்திற்கும்,ஆதிக்கத்திற்கும், முதலுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பது தான் அவர்களின் லட்சியம்.மேலும் சாதி இருக்கவேண்டும்,சாதியை ஒழித்தால் நாம் சொத்தையும்,முதலையும்,குறைந்த கூலியை கொடுப்பதையும் இழக்கிறோம் என்பதை இந்த மூன்று பேரும் தெளிவாகப்புரிந்துக்கொண்டவர்கள்.
இவர்கள் தான் தேசிய இனத்தின் முதலாளிகளாய் வளர்ந்து வருகிறவர்கள்.இவர்களைச்சேர்ந்துக்கொண்டு எப்படி இனவிடுதலை பெறமுடியும்.இனரிதியாக உணர்வு இங்கு யாருக்கும் இல்லை. எல்லாம் சாதிதான்.சாதியை ஒழிக்க குரல் கொடுப்பதைவிட்டு இனம் என்று தமிழன் என்று சாதி பிரச்சனைக்கு பார்ப்பனர்கள் தான் என்று சொல்லி உயர்சாதி வெறியர்களின் நிலையைக்கு எதிராக போராடாமல் தமிழ் என்று கத்திக்கொண்டு இருந்தால் யார்தான் உங்கள் பக்கம் வருவார்கள்.காலம் காலமாக தலீத்மக்கள் ஒடுக்கப்பட்டுவருகிறார்கள், அவர்களை பார்ப்பனர்கள் மட்டுமா ஒடுக்குகிறார்கள் உயர்சாதி,பிற்படுத்தப்பட்டசாதி தமிழர்களும் கூடசேர்ந்துதான் ஒடுக்குகிறார்கள்.இந்த முரண்பாடு ஏறக்குறையா இந்தியா முழுவதும் இப்படி தான் இருக்கிறது.இவர்களுக்கு எதிராக ஏதாவது பேசி பாருங்கள் உங்கள் தமிழ்தேசியத்தை சுக்கு நூறாக உடைப்பார்கள் என்று தெரியும்.இந்தியாவில் இருக்கிற மூன்று பிரச்சனைகளை ஒழித்துவிட்டாலே எல்லா பிரச்சனைகளும் ஒழிந்துவிடும்.இது ஒழிப்பது சாத்தியம் இல்லாதது,என்று சொல்லி தமிழ்தேசிய விடுதலை தான் சாத்தியம் என்றும் சொல்கிறீர்கள்.இந்திய அரசை பலவினப்படுத்தி தமிழ் தேசியம் சாதிக்கமுடியம் என்றால்,இந்தியதேசியத்தில் அரசியல் ஆண்டைகளான பார்ப்பனர்களை வெல்லமுடியும் என்றால்,இந்தியா முழுவது ஒடுக்கப்பட்டு இருக்கும் உழைக்கிற மக்களை ஒன்றுபடுத்தி ஏன் பாட்டாளிவர்க்கத்தில் தலைமையில் சோசியலிச இந்தியாவை படைக்கமுடியாது.

 
At March 24, 2016 at 12:54 AM , Blogger Unknown said...

Keep away the summer heat with ourtechnicians Services. Book your Ac services or installation with us. Book now feel happy.
Services: refrigerated repair and maintenance, Ac repair and installation, washer repair and replace, water purifier repair and installation, chimney repair and install, flour grinder repair and service, mixer grinder repair and maintenance, stove repair and installation.
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home