விவாதம்: ம.க.இ.க.வே ஏன் இந்த இரட்டை வேடம்? - பகுதி 3
அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்…
கணினியில் அமர்வதற்கேற்ப நேரமும், சூழ்நிலையும் இல்லாமைக்கு வருந்துகிறேன். பதில் அளிக்காமல் எங்கும் ஓடி விட மாட்டேன். எனது மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு என்னை நினைவு படுத்துங்கள்.
ஆனால், பதிலளிப்பதற்கு நேரமின்றி வேறு வேலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த கால தாமதங்கள். அனைவரும் பொறுத்தருளவும், மன்னிக்கவும் வேண்டுகிறேன்..
அன்புடன்,
அதிரடியான்.
ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிக்கு கீழ்கண்டவாறு எழுதியிருந்தோம்.
இது நாள் வரை கீழ்க்கண்டவாறு தான் ம.க.இ.க.வின் உண்மையான நிலைப்பாடு இருப்பதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் (Races) ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்”
அதாவது, அவர்கள் தற்பொழுது குறிப்பிட்டு வருவதைப் போல ”தமிழர்”, ”கன்னடர்” என்பதெல்லாம் கூட இனவெறி இவர்கள் வரையறுப்பதில்லை. ”ஆரியர்”-”திராவிடர்” என்பது தான் இனவெறி என்று அவர்கள் வரையறுத்திருக்கின்றனர்.
ஆரியர்களை இடித்துரைத்தால் பார்ப்பனர்களுக்குத்தானே வலிக்க வேண்டும். ம.க.இ.க.விற்கு ஏன் வலிக்கிறது என்று தான் புரியவில்லை.
எனவே ”ஆரியம் – திராவிடம் எல்லாம் பேசாதீங்க” என்று முழக்கமிடும் ம.க.இ.க. தற்பொழுது கீழ்க்கண்டவாறும் எழுதி தனது இரட்டை வேடத்தை தற்பொழுது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
//////////”இந்தியாவை பற்றியும், பார்ப்பனீயத்தை பற்றியும், தமிழ் ஆரிய போராட்டம் பற்றியும் நாம் நன்கு அறிவோம். இது இந்து,இந்தி,இந்தியா என்கிற பார்ப்பனிய உள்ளடக்கத்துடன் கட்டியெழுப்பபபட்டிருக்கும் ‘இந்து தேசியம்’என்பதையும் அறிவோம். எனவே தமிழுக்கும் ஆரியத்துக்குமான போராட்டத்தை நாம் எங்கேயும் எப்போதுமே மறுத்ததில்லை, அதை எதார்த்தமாக உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் ஏற்கிறோம். ”//////////
-சர்வதேசியவாதிகள்
“ஆரிய திராவிடமெல்லாம் என்னைக்கோ முடிஞ்சி போச்சு.. இப்ப ஏன் அவா அதப் பேசணும்” என்கிற திருவல்லிக்கேணி பார்ப்பானைப் போலவே ம.க.இ.க.வினரும் எழுதியிருப்பதை எண்ணி நாம் நகைக்கவே முடிகிறது.
ஏன் இந்த இரட்டை வேடம் என்று தாம் நாம் உரத்துக் கேள்வி கேட்கிறோம்!
இதற்கு அவர்களிடத்தில் முறையான பதில் இல்லை. நான் அவர்களது நிலைப்பாடு என கூறியிருப்பதை கூட அது அவர்களது சரியான நிலைப்பாடு தான் என்று ஏற்கவுமில்லை. மறுக்கவுமில்லை. அதன் பின்னர் நான் எழுதியதைப் பதிகிறேன்..
சர்வதேசியவாதிகளுக்கு பதில்….
தமிழர்கள் மீது தில்லிக்காரர்கள் செலுத்தும் ஒடுக்குமுறை சிறப்புக் காரணங்களைக் கொண்டது என்று தங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உங்களின் பதில் மூலம் அறிந்தேன். வரலாற்று ரீதியாக தமிழினம் ஆரிய இந்திய அரசால் ஒடுக்கப்படுதற்கு சிறப்புக் காரணங்கள் உண்டு என்பதற்கு, சில காரணங்களை நீங்களே பட்டியலிட்டும் காட்டியுள்ளீர்கள். நன்று.
அதே போல, தமிழுக்கும் ஆரியத்திற்கும் இடையிலான பகைமையை நாங்கள் மறுப்பதில்லை என்றும் நீங்கள் கூறியிருப்பதன் மூலம் ஆரியத்தின் இன்றைய வடிவமான இந்திய அரசுக்கும், தமிழினத்திற்கும் முரண்பாடும் பகைமையும் இருப்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். சரி.
ஆனால், இவற்றையெல்லாம், உணர்ந்த உங்களால், ”வரலாற்று ரீதியான சிறப்பு காரணங்கள் எதுவும் இன்றி ‘தமிழ் இனம் என்பதனாலேயே’ நம் மீது இந்திய அரசின் பாசிச ஒடுக்குமுறை ஏவி விடப்படுகிறது என்ற பார்வை புரியவில்லை” என்று எப்படி வாய்க்கூசாமல் சொல்ல முடிகின்றது?
ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழினத்திற்கு எதிரியாகவே நின்று கொண்டிருக்கும் ஆரியத்தையும், அதன் இன்றைய அரசு – அரசியல் வடிவமே, இந்திய அரசு – இந்தியத் தேசியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தால் தான் இதில் தெளிவுபெற முடியும். இதில், தெளிவுபெற்றது போல் நடித்துக் கொண்டிருந்தால் இவையெல்லாம் புரியாது.
எப்படி சிங்களனுக்கு, தமிழர்களை ஒடுக்க ”தமிழன்“ என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே போதிய காரணமாக இருக்கின்றதோ, அதே போலத்தான் ஆரிய ”இந்திய”னுக்கும் ”தமிழர்” என்ற அடையாளமே அவாகளை ஒடுக்கத் தூண்டுகிற சிறப்புக் காரணமாக விளங்குகின்றது. ஏனெனில், இந்திய அரசு என்பது ஆரிய இனவெறி அரசு என்பதே எங்களது வரையரை. இது உங்களுக்கு தெரிந்திருந்தும், அது தெரியாதது போல பேசி நடிக்கீறீர்கள் என்று தான் நான் குற்றம் சாட்டுகின்றேன்.
மார்க்சியத்தை அறிவியலாக பார்க்காமல், அதனை ஒரு சூத்திரம்(Formula) போலவே பார்த்து வருகின்ற மடமைத்தனம் தான் உங்களைப் போன்ற பலரிடமும் உள்ளது. இதிலிருந்து பிறக்கும் பார்வை கோளாறு தான் இதற்குக் காரணம். அதனால் தான் எங்களது பார்வை புரியவில்லை என உங்களால் வாதிட முடிகிறது.
மார்க்சியத்தை இன்றைய சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், ”அது இவ்வாறு கூறுகின்றது, எனவே அதன்படி இப்படி இருக்க வேண்டும், இப்படி செயல்பட வேண்டும்” என்று சூத்திரத்தை கையாள்வது போல மார்க்சியத்தை பார்ப்பது தான் உங்களைப் போன்றோரின் ”புரியாமை”க்கான காரணம் என்று நான் உறுதியாக வரையறுக்கிறேன்.
“திராவிடம்” இன்று தி.மு.கவிடம் மட்டும் தான் உள்ளது என்கிறீர்கள். சரி. நாம் திராவிடத்தை ஆதரிக்கவில்லை என்பதும் சரி. ஆனால், ”ஆரியம் – திராவிடம்” என்று கூறுவதைக் கூட ”இனவெறி” என்று கூறுவது தானே உங்களது வழக்கமான பார்வை.
”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்” என்பது தானே உங்களது நிலைப்பாட்டின் சாரம். இதனை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
கன்னடர், தெலுங்கர், தமிழர் என்று கூறுவதெல்லாம் கூட நேரடி இனவெறி என்று நீங்கள் வரையறுக்கவில்லை. மாறாக, எந்த ”“ஆரியம் – தமிழர்” ஆகியவற்றின் பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று கூறுகிறீர்களோ, அதே “ஆரிய – திராவிடர்” வாதங்களைத் தான், ம.க.இ.க.வினர் இனவாதம் என்று இடது கையால் தள்ளுகின்றனர் என்பதே உங்களை சுட்டெரிக்கும் உண்மை. இதனை மறைத்திடவே, தற்பொழுது, “ஆரிய தமிழ்” பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்றும் பசப்புகிறீர்கள்.
ஆரியம் இந்திய அரசை ஆள்கின்றது என்பதனை ஏற்கிறீர்களா? அல்லது அதெல்லாம் இன்றைக்கு கிடையாது என்கிறீர்களா?
“ஏற்கிறீர்கள்” என்றால், “ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்க்கு எதிராக நிற்கிறது” என்ற எங்களது கூற்றை எப்படி உங்களால் நகைக்க முடிகிறது?
“ஏற்கவில்லை” என்றால், ““ஆரியம்- தமிழர்” என்ற பகைமை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று எப்படி உங்களால் சொல்ல முடிகின்றது?
நாங்கள் கேட்பதெல்லாம் ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைக் காப்பாற்ற இந்த இரட்டை வேடம்? என்பதைத் தான்….
Labels: ஈழம், ம.க.இ.க. விவாதம், விவாதம்
1 Comments:
மணிப்பூர் மற்றும் நாகலாந்து மக்களை இந்திய அரசு இதனை விட மோசமாக ஒடுக்குகின்றதே அதற்கு
எந்த காரணத்தை முன் வைப்பீர்கள்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home