Friday, October 7, 2011

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

மற்ற தேசிய இனங்களை விட, இந்திய அரசு ஆரிய இனவெறியுடன் தமிழ் இனத்தை ஒடுக்கும் போது, தமிழ் இனம் தமது விடுதலைக்காகத் தான் முதலில் போராட வேண்டும். போராடுகிறது.


ஆனால், ம.க.இ.க.வோ, இந்தியா முழுவதுமுள்ள தேசிய இனங்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்றுக் கூறிக்கொண்டு "புரட்சிகர இந்தியா" என்று பின்பாட்டுப் பாடுகின்றது.


இவ்வாறு அடையவே முடியாத இலட்சியத்தை கைக் கொண்டுள்ள ம.க.இ.க., தமது அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யும்?


அதற்காகத் தான் சட்டவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் முன் வைத்து சில வெற்றிகளை ஈட்டிக் காட்டுகின்றது. அதன் மூலம், தற்போது இருக்கின்ற அரச கட்டமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், அதன் மறுபுறத்தில், தமது அணிகளை "வெற்றி! வெற்றி!” எனவும், ”புரட்சிக்கு இன்னும் சில நாட்கள்" தான் எனவும் ஏமாற்றித் தக்க வைத்துக் கொள்கின்றது.


தமிழீழ மக்களின் தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை இழிவு படுத்திய ம.க.இ.க., தமிழகத்தில் தனிமைப்பட்டது. அதன் காரணமாகத் தான், மாவீரன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் பல சமரசங்களை செய்து கொண்டு "ஆள்பிடிக்க" முயன்றனர். இந்த "ஆள்பிடிக்கும்" தந்திரத்தை புரிந்து கொண்டு தான், அதனைத் தவறு என்று கண்டித்தார் ம.க.இ.க.வின் முன்னாள் கொ.ப.செ. இரயாகரன். அதன் பிறகு இருவருக்கும் இடையே உறவு முறிந்ததை இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கலாம்.


ம.க.இ.க.வின் தலைமையே சட்டவாத்தாலும், சீர்திருத்தவாதத்தாலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக தோழர் மூடக்கிழவன் கூறுகிறார். இதில் வியப்பொன்றும் இல்லை. ஓர் அடையக் கூடிய இலக்கில்லாத ஓர் அமைப்பு எவ்வாறு சீர்திருத்தவாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கி சீரழியும் என்பதற்கு ம.க.இ.க. ஓர் அனுபவரீதியான எடுத்துக்காட்டு.


அதனையே, ம.க.இ.க. அணிகளுக்கிடையேயான இந்த உரையாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது.


சூறாவளித் தோழர்களும், தோழர் மூடக்கிழவனும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இலக்கில்லாத, வாய்ச்சவடால் புரட்சியாளர்களான ம.க.இ.க.வை புறந்தள்ளிவிட்டு, தான் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கக் குரலாக நின்றொலித்து, தமிழ்த் தேச விடுதலைக்கு முன்னிற்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.


இக்கடிதங்களின் வாயிலாக நான் கேட்டுக் கொள்வதும் இதைத் தான்.


அன்புடன்,

அதிரடியான்

Labels: ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

தொலை நோக்கு பார்வையுடன் ஒர் அமைப்பை ஏற்படுத்தவதும், இலட்சியத்தை கட்டியமைப்பதும் தவறல்ல. உதாரணத்திற்கு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது ஓர் தொலை நோக்குப் பார்வை. தனக்கென ஆட்சி அதிகாரம் கொண்ட ஓர் தேசத்தின் பாட்டாளி வர்க்கம், தம்மைப் போலவே ஆட்சி செய்யும் அல்லது முதலாளிய ஆட்சிக்கு எதிராகப் போராடும் பிற தேசிய இன பாட்டாளி வர்க்கங்களை ஆதரிப்பதும், உதவுவதும் தான் பாட்டாளி வர்க்க சர்வத்தேசியத்தை உருவாக்கும்.

அதனை விடுத்து, தமக்கென ஒரு சொந்த தேசமே அமைத்துக் கொள்ளாத ஓர் பாட்டாளி வர்க்கம், முதலில் தாம் அதிகாரங்களைக் கைப்பற்றாமல், பிற தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும்?




ம.க.இ.க. பெரிதும் விரும்பும் "புரட்சிகர இந்தியா” அமைய வாய்ப்புள்ளதா? இந்தியச் சிறையில் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் தமது தேச விடுதலைப் போரை நடத்தி, அவர்களுக்கான தேசக் குடியரசுகளை அமைத்துக் கொண்ட பின்னர், அத்தேசக் குடியரசுகளின் அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றியதன் பின், பல்வேறு தேசிய இனங்களின் குடியரசுகளும், அதன் பாட்டாளி வர்க்கங்களும் விரும்பி இணைந்து ஓர் 'புரட்சிகர இந்தியா' என்ற ஒன்றியத்தை நிறுவ முயலலாம்.




இது ஓர் தொலைநோக்காகத் தான் இருக்குமே ஒழிய, உடனடியான இலக்காக இதனைக் கைக்கொள்ள முடியாது.




ஏனெனில், இந்திய ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கபடுகின்ற தேசிய இனங்கள், தமது தேச விடுதலைக்காகப் போராடும் போது, சில தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு, தேச விடுதலைக்காகப் போராடும் மற்றொரு தேசிய இன விடுதலைப் போரை நசுக்கவும் வாய்ப்பு உண்டு.




அவ்வமயம், இரு தேசிய இனப் பாட்டாளிகளிடையே ஏற்படும் பிளவுகளும், மனக்கசப்புகளும் எளிதில் களைந்து விடாது. அவர்களை ஓரணியில் திரட்ட முடியாமல் போகவும் வாய்ப்புண்டு. இவ்வாறு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டிருக்கும், 'புரட்சிகர இந்தியா' என்ற எட்டாக்கனிக் கோட்பாட்டை தமது உடனடி இலக்காகக் கைக்கொள்ளும் ம.க.இ.க., தமது அணிகளை "நாளையே புரட்சி" என ஏமாற்றுகிறது என்பதைத் தவிர வேறென்ன செய்கிறது?




காவிரி நீரைத் தடுப்பதாலும், முல்லைப் பெரியாறு அணையை மறிப்பதாலும், கிருஷ்ணா நீரை தடுக்க அணைகள் கட்டுவதாலும், தமிழ்நாட்டில் உள்ள உழவர்கள், பாட்டாளிகள் பாதிப்பு அடைவார்களே என அங்குள்ள தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கம் இன்றைக்கு கவலைப்படவில்லை. அதிக எண்ணிக்கையில், தமிழ்நாட்டிற்குள் புகுவதால் தமிழ்நாட்டில் உள்ள பாட்டாளிகள் வேலை இழப்பார்களே, என வடநாட்டு, மலையாள பாட்டாளிகள் என்றைக்கும் எண்ணுவதில்லை.



இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினால், ‘தேசிய ஒருமைப்பாடு’ என்று கூச்சலிடுகிறது இந்திய ஆளும் வர்க்கம். அதனையே, ‘பாட்டாளி வர்க்க சர்வதேசியம்’ என்று மறுஒளிபரப்பு செய்கிறது ம.க.இ.க.




பல்வேறு இனக்குழுக்களும், வரலாற்றுத் தாயகங்களைக் கொண்ட தேசிய இனங்களும் கொண்ட இந்தியத் துணைக் கண்டப் பகுதியை, ‘இந்தியா’ என்ற ஒற்றை நாட்டுக்குள் அடக்கி, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தி தேசிய முதலாளிகளின் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது.

பார்ப்பனர்களின் இந்துத் தேசியம் – பனியாக்களின் இந்தித் தேசியம் ஆகியவை இணைந்து, புனைந்த ‘இந்தியா’ என்ற இந்தக் கட்டமைப்பு, சுரண்டலையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்களும், பனியாக்களும் வாழ்வதற்கு வாய்ப்பான கட்டமைப்பாக உள்ளது. சமற்கிருத வடிவிலான இந்தி மொழியின் மேலாதிக்கம், இந்தி பேசும் மக்களின் பெயரிரலான பண்பாட்டுத் திணிப்பு, என பிற தேசிய இன மக்களையும் ‘இந்தியன்’ என்ற செயற்கையான பெயரில் ஒன்றுபடுத்தும் முதலாளிய சந்தை உருவாக்கப் பணிகளை ஆளும் வர்க்கம் நோக்கமாகக் கொண்டது.

இந்திய ஆளும் வர்க்கம் இவ்வாறு உருவாக்கிய இந்தியா என்ற செயற்கை கட்டமைப்பில், மூவாயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த தமிழினம் போன்ற இனங்கள் சிறுபான்மை இனமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. மற்ற தேசிய இனங்களையும் இந்திய ஆளும் வர்க்கம் சுரண்டி வந்தாலும், இந்திய ஆளும் வர்க்கத்தில் முதன்மைக் கூட்டாளியாக உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் தமிழினத்தின் மீது தீராதப் பகை கொண்டுள்ளனர்.

தமிழர்களின் சிந்துவெளி நாகரிகத்தை அழித்த ஆரியப் படையெடுப்பு, இன்றும் அதன் பகை வெறி அடங்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான், இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்கள் என ஒட்டுமொத்த தமிழ் இனத்தையுமே பகையாகக் கருதுவதற்கு முதன்மைக் காரணம்.




(தொடரும்)


------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: , ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

மார்க்சியம் கற்றறிந்தவர்கள் இந்தியாவைப் பல் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றுத் தெளிவாக வரையறுக்கின்றனர். சுரண்டிப் பிழைக்கும் ஆரியப் பார்ப்பனர்களும், பனியா முதலாளிகளும் உருவாக்கிய ஓர் அடக்குமுறைக் கட்டமைப்பே இந்தியா எனப்படும் இந்நாடு. இப்படிப்பட்ட ‘இந்தியா’வை புரட்சியின் மூலம் கைப்பற்றி தூக்கியெறிவது தான் இலட்சியம் எனக் கொண்டிருக்கும் ம.க.இ.க.வினரை என்ன சொல்வது?

இங்குள்ள தேசிய இனங்கள் பலவும் தமக்கான தாயக உரிமையை, மொழி உரிமையை, இழந்து நிற்கின்றனர். இன்று தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்து உறவாடி ‘இந்தியா’ என்ற கட்டமைப்பை மேலும் வலுவாக்க முயல்கின்றனர். இந்திய ஆளும் வர்க்கம், ‘இந்தியா’வில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ‘தேசிய ஒருமைப்பாடு’ குறித்து கூப்பாடு போடுகின்றது.

இப்படிப்பட்ட சூழலில், இங்குள்ள புரட்சிகர சக்திகள் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகளின் சந்தையாக விளங்கும் ‘இந்தியா’ என்ற இக்கட்டமைப்பு உடைத்துச் சிதறச் செய்து, முதலாளிகளை பலவீனப்படுத்தி, இந்திய ஆளும் வர்க்கத்தை நிலைகுலையச் செய்ய வேண்டும்.

ஆனால், இப்படிப்பட்ட போலிக் கட்டமைப்பான இந்தியாவை, தமது ‘தாய்த் திருநாடு’ என்று பாரத மாதா பஜனை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் ம.க.இ.க.வினர் என்ன செய்கின்றனர்? ‘புரட்சிகர இந்தியா’ என்ற பெயரில், இந்திய ஆளும் வர்க்கங்களால் புனையப்படும் இந்தியத் தேசியத்திற்கு மார்க்சிய சாயமடித்துக் கொள்கிறது. பல் தேசிய இன உழைக்கும் மக்களும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.

ஆரியப் பார்ப்பனர்களின் அரசியல் வடிவமான இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டுகள் தமது நெஞ்சில் சுமந்து வந்திருக்கும் தமிழின வெறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தித் திணிப்பின் போது சுட்டுக் கொன்ற போது வெளிப்பட்டது. ராஜீவ் என்ற வடநாட்டுப் பொறுக்கி, தமிழீழத் தமிழர்கள் மீது ஏவிய இனவெறிப் படுகொலை இந்திய அரசு மீண்டும் தான் யாரென அம்பலப்படுத்தியது.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் ‘வங்கதேசம் போல நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருப்போம்’ என்று சொல்லாமல் சொல்லி, இந்திய அரசிடம் கெஞ்சி நின்ற போதும் கூட, தமிழீழத்தை அழித்தொழிக்க இந்திய அரசு நடத்திய வன்மங்கள் யாரும் மறக்கமுடியாத்தல்ல.

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மீனவர்கள் சாவதை விரும்பி நிற்கிற இந்திய அரசு, தமது உண்மையான எதிரிகளாக தமிழர்களைத் தான் கருதுகின்றது. இது இந்திய ஆளும் வர்க்கத்தின் தன்மை. தமிழினத்தை போல் இந்திய அரசு எந்த இனத்தையும் இவ்வளவு கொடூரமாக அழித்தொழிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ் இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல போராட்ட வடிவங்கள் எடுத்துப் போராடிய போதும், இந்திய அரசினால் ஒடுக்கப்படும் இந்தியாவின் பிற தேசிய இனங்களில் உள்ள உழைக்கும் மக்களோ, சனநாயக சக்திகளோ தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கவில்லை, போராடவில்லை. மவுன சாட்சிகளாக நின்று வேடிக்கைப் பார்த்தனர். சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற போலிப் பொதுவுடைமை பேசும் இந்தியத் தேசிய வெறிக் கட்சிகள் தான், வலிந்து சென்று அவ்வாறு தோற்றமளிக்கும் சில போராட்டங்களை நடத்தியது.

உத்திரப்பிரதேசப் பாட்டாளி வர்க்கமும், கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்நாட்டுப் பாட்டாளி வர்க்கமும் தங்களை ஒரே ‘இந்திய’ நாட்டின் பாட்டாளிகளாக உணர்கின்றார்களா? தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் பீகார், ஆந்திர, மலையாளப் பாட்டாளிகள் குவிந்து கொண்டு, தமிழ் பாட்டாளிகளின் வேலைகளைப் பறிக்கின்றனர் என்பது கண்கூடு.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ‘புரட்சி’யை நிறைவேற்ற பணி செய்து வரும் எஸ்.ஓ.சி. குழுவினர், தமிழ்நாட்டிலேயே ஒரு பாட்டாளி வர்க்க சக்தியாக இன்னும் எழுச்சி பெற முடியவில்லையே ஏன்?

ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழ் இனத்திற்கு ஆபத்து சிக்கல்களின் போது உதவ நினைக்காத பிற தேசிய இனங்களின் தாயகத்தில் காலூன்றி, அங்கு கட்சி அமைத்து, அதன் பின்னர் அத்தேசிய இனத்தில் ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைக் கட்டியெழுப்பி, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ‘புரட்சி’ செய்யும் வரை, தமிழினம் அடிமைப்பட்டு தான் கிடக்க வேண்டும் என ம.க.இ.க. எண்ணுகிறதா?

தமிழ்நாட்டில் காலூன்றியதைப் போல ம.க.இ.க.வினர், அவர்கள் புனையும் ‘புரட்சிகர இந்தியா’வின் பிற தேசிய இனத் தாயகங்களில் கட்சி கட்டி எழுப்பி புரட்சி செய்ய குறைந்தபட்சம் 200 ஆண்டுகளாவது தேவை. இது நடக்க்க் கூடிய செயல் தானா?




(தொடரும்)


------------------------

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1

http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2

http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3

http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html


மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4

http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html

------------------------

Labels: , ,

மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1


புரட்சிகர வணக்கம்.

உங்கள் பார்வையில் மட்டுமல்ல, முன்னாள் மற்றும் இன்னாள் ம.க.இ.க.வினர் பலரது பார்வையிலும் நான் ஒரு ‘ஓடுகாலி’ அல்லது ‘இனவாதி’யாகத் தான் குறிப்பிடப் படுவேன் என்பது எனக்கு நன்குத் தெரியும். இருந்த போதும், சூறாவளி இணையதளத்தில் நடக்கும் விவாதங்களை நான் கவனித்து வருபவன் என்ற முறையிலும், ம.க.இ.க.வினர் மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருப்பவன் ல் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சீர்திருத்தவாத, சட்டவாதப் பாதையில் செல்வதாகத் தாங்கள் குறைபட்டுக் கொள்கிறீர்கள். அது குறித்த விமர்சனங்களை எழுதி வருகிறீர்கள். இதே போன்ற விமர்சனங்கள், தங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல அமைப்பில் உள்ளவர்கள் பலருக்கும், ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி எழுந்து கொண்டே வருகின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி(எம்-எல்) – மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு[CPI-ML-SOC] எனப்படும் கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளான, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., வி.வி.மு., ம.உ.பா.மை., மற்றும், பத்திரிக்கைகளான பு.ஜ., பு.க., போன்றவை அனைத்து ‘புரட்சிகர’ அமைப்புகளுக்கும் இறுதி இலட்சியம் எது? இவர்களுடைய இறுதிக் கனவு எது? இவர்கள் அடைய நினைப்பது எதை?

‘புரட்சிகர சனநாயக இந்தியா’ – இது தான் அது.

அவர்களது பாணியில் சொன்னால், இந்தியாவைத் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், தரகு அரசியல்வாதிகளை அகற்றிவிட்டு, அரசு இயந்திரத்தை முடக்கி, புதிய ‘இந்தியா’யாவைப் படைத்து, ‘பாட்டாளிகள்’ தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுது ‘புரட்சி’கர இலட்சியம்.




இது அடையக்கூடிய இலட்சியம் தானா என்பதை முதலில் சிந்திப்போம். அப்பொழுது தான், இவர்களை சீர்திருத்த வாதத்திலும், சட்டவாதத்திலும் மூழ்கடித்த வேரைக் கண்டுபிடிக்க முடியும்.




(தொடரும்)



------------------------
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 1
http://athiradiyaan.blogspot.com/2011/10/1.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 2
http://athiradiyaan.blogspot.com/2011/10/2.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 3
http://athiradiyaan.blogspot.com/2011/10/3.html
மூடக்கிழவன் மற்றும் சூறாவளி தோழர்களுக்கு ஒரு கடிதம்! - 4
http://athiradiyaan.blogspot.com/2011/10/4.html
------------------------

Labels: ,

Friday, July 29, 2011

சிங்கள இனவெறி ஜே.வி.பி.யின் தமிழகக் கிளை தான் ம.க.இ.க.!

நீண்ட நாட்களாக இணையப் பக்கம் வருவதில்லை. அவ்வப்போது வந்தாலும், நேரத்தை வீணடிக்கும் விவாதங்களில் பங்கேற்கவும் மனமில்லை. இருந்தாலும்,  ம.க.இ.க.வின் வினவு இணையத்தில் வெளியான ஓர் கட்டுரை குறித்து எனது கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

"தமிழ்நாட்டில் இருக்க்க் கூடிய தமிழர்கள் ஒன்று சேரக் கூடாவே கூடாது. அது என்ன தமிழ் இன உணர்ச்சி, தமிழன், வெங்காயம்? எல்லாப் பயலும் சாதி சாதியா தான் கிடக்கணும்..." என நினைக்கும் பலரையும் இந்தக் கட்டுரை புல்லரிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தமிழன்னா பெரிய இவனா? என்று முண்டா முறுக்கும் இந்தியத் தேசியவாதிகளுக்கும் இக்கட்டுரை மிகப்பிடித்திருக்கும்.

 

ம.க.இ.க.வை பொறுத்த வரை ஈழத்திற்காக அவர்கள் செய்வது தான் போராட்டம், மற்றவர்கள் எது செய்தாலும் அது 'பிழைப்புவாதம்' செய்பவர்கள் பிழைப்புவாதிகள். அவர்கள் சொல்வது தான் தீர்வு மற்றவர்கள் சொல்வதெல்லாம் 'ஏகாதிபத்திய சதி மற்றும் சூழ்ச்சிகள்'. ம.க.இ.க.வை கவனித்து வருபவர்களுக்கு இது  ஒன்றும் புதிதல்ல.

 

ம.க.இ.க. வின் மாற்று அரசியலை(?) கூர்ந்து நோக்குவதாக சொல்லும், சுகுதேவ்(Sukudev) என்பவர்,  "மணியரசன் செய்தது என்ன?" என்று கேட்டிருக்கிறார்.  வெறும் கூட்டங்களில் கலந்து கொண்டும் தான் அவர் பேசினாரா என்றும் இந்த நபர் கேட்டிருக்கிறார்.

 

ம.க.இ.க. கூறுவதைப் போல, நம்மள விட்டா வேற யாருமே போராடக் கூட தகுதி இல்ல என்று நினைக்கும் அளவிக்கு மணியரசனின் த.தே.பொ.க. தன்னகங்காரமுடைய கட்சி அல்ல என்பதையும், ஈழத்திற்காக அவருடையை அமைப்பு நடத்திய போராட்டங்களைத் தெரிந்தவன் என்ற முறையிலும் சில விடயங்களை பகிர்கிறேன்.

 

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகத் தான் இயக்குநர் சீமான் முதலில் கைது செய்யப்பட்டார். அப்பொதுக் கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மற்றும் பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரும் கைது செய்யபட்டு சிறைபட்டனர். இக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈழப்போருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாயின என்று கூட சொல்ல்லாம்.

 

அப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர், ஈரோட்டில், ஈழத்திற்கு எதிராக நஞ்சு க்க்கிய இந்து நாளிதழ்களை எரித்த்து, தஞ்சையில் ஈழப்போரை கொச்சைப்படுத்திய செயலலிதா கொடும்பாவியை எரித்தது என பல்வேறு போராட்டங்களை தனித்தே நடத்தி வந்திருந்த நிலையில், ஈழப்போர் உக்கிரமடைந்த போதும் ம.க.இ.க.வினரைப் போல 'நாங்கள மட்டும் தான் போராளிகள்' என்று அகங்காரம் கொண்டு அலையவில்லை.

 

அப்போது, ஈழவிடுதலைக்கு ஆதரவாகவும், இந்திய அரசே போரை நடத்துகின்றது என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்த கொளத்தூர் மணியின் பெ.தி.க., தியாகுவின் த.தே.வி.இ. உள்ளிட்ட அமைப்புகளை இணைத்து தமிழர் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திட தோழர் மணியரசனின் முயற்சி மிக முக்கிய காரணம்.

 

இக்கூட்டமைப்பு போரை நடத்துவது இந்திய அரசு தான் என்று அம்பலப்படுத்தும் விதமாக இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தஞ்சையில் இந்திய விமானப்படைத் தளம் முற்றுகையிடப்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பல நூறு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போராட்டம் குறித்து தஞ்சையில் உள்ள ம.க.இ.க. நிர்வாக காளிமுத்துவிடம் கேட்டுப் பாருங்கள்.

 

அதனை விட முக்கியமான போராட்டம், இந்திய இலங்கை அரசுகளின் கொடிகளை எரித்தது. த.தே..பொ.க. மற்றும் த.தே.வி.இ. தோழர்கள் இப்போராட்டதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

த.தே.பொ.க. மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், இலக்கிய மன்றங்கள், மாணவர், வழக்கறிஞர் அமைப்புகள் என பலவும் ஈழப்போரை எதிர்த்த பல அமைப்புகளை, போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ம.க.இ.க.வின் ரசிகர் சுகுதேவைப் போல, ம.க.இ.க. தலைமையில் நடந்தால் தான் அது போராட்டம் என்று அகங்காரத்துடன் நினைக்கும் பலர் இன்றும் ம.க.இ.க.வில் உள்ளனர். ஏனெனில், தன்னுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு, போராடும் அமைப்புகளையும், நபர்களையும் ம.க.இ.க.வின் அதன் தலைமையும் எப்போதும் அங்கீகரிப்பதில்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் சுகுதேவ் போன்றவர்கள்.

 
அதிக எண்ணிக்கையில் தமிழர்களுடைய தாயகமான தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் புகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ம.க.இ.க.விற்கு கவலை கிடையாது. ஏனெனில், தமிழ்நாடு என்ற தாயகம் இருப்பதால் தானே இவர்கள் தமிழ்நாடு தமிழன் என்றெல்லாம் பேசுகிறார்கள், ஆடுகிறார்கள் என்று சொல்லும் இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் மேட்டுக்குடிக் குரலின் மற்றொரு குரலாகத் தான் ம.க.இ.க. ஒலிப்பதை காண முடிகின்றது. 
 
ஈழத்தமிழர்களின் தாயகப்பகுதிகளாக வடக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிங்கள அரசு குடியமர்த்துவதை கண்டிப்பதாக சொல்லிக் கொள்ளும் ம.க.இ.க., சிங்கள இனவெறி அரசைப் போலவே இந்திய ஆளும் வர்க்கமும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குடிபெயர்வதை ஊக்குவிப்பதை கண்டிக்காது. ஏனென்றால் ம.க.இ.க. இந்திய அரசின் உளவுப்படை "புரட்சியாளர்கள்".
 

உண்மையில், சிங்கள இனவெறிக் கட்சியான ஜே.வி.பி.யின் தமிழக்க் கிளை தான் ம.க.இ.க. கும்பல் என்ற பெயரில் இயங்குகிறது என்று நான் அடித்துக் கூறுவேன். இரண்டுக் கட்சிகளுக்கும் ஒரே அஜன்டா தான்.  இருவருக்கும் தமிழன் என்று சொன்னால் பிடிக்காது. பிரபாகரன் என்றால் பிடிக்காது. தனிஈழம் என்றால் பிடிக்காது. இருவருக்குமே மாவேவும், லெனினும் தான் வழிகாட்டிகள்.!

 

Tuesday, November 17, 2009

ஈழம் குறித்து கருணாநிதியின் குரலும் ம.க.இ.க.வின் குரலும்


"தமிழீழத்தில் இவ்வளவு பேர் கொல்லப்பட்டதற்குக் காரணம் பிரபாகரனும் அவரது தவறான அரசியலும் தான்”

”சகோதர யுத்தத்தால் உடனிருந்தவர்களை அழித்தார் பிரபாகரன்”

மேலே உள்ளதையெல்லாம் கூறியிருப்பது சிங்கள இனவெறிய அரசின் அதிபர் ராஜபட்சே அல்ல, தமிழக முதல்வரும், தமிழினத்தின் துரோகியுமாக பரிணமித்திருக்கும் கருணாநிதி தான் இவ்வாறு, தமது கட்சியின் ஏடான முரசொலியில் எழுதியுள்ளார்.

கருணாநிதியின் இக்குரலை சு.சாமி, இந்து(த்வா) என்.ராம், பாப்பாத்தி செயா, சோ(மாறி) உள்ளிட்ட பார்ப்பனிய பொறுக்கி நாய்கள் அப்படியே வழிமொழிகின்றன. ஆரிய இனவெறி இந்திய பாசிஸ்டுகள் அதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இதில் வியப்பில்லலை. ஆனால், நம்மை வியக்க வைக்கும் செய்து ஒன்றும் இதில் உள்ளது.

இவர்கள் எல்லோரையுமே எதிரி என்று கூக்குரலிட்டும், ””புரட்சி” நடத்த வாங்கோண்ணா” என்று அறைகூவல் விடுத்தும் இயக்கம் நடத்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் குரலும் இது தான் என்பது வியப்பு. ம.க.இ.க.வினரை கவனித்து வருபவர்களுக்கு, தமிழ் இனத்துரோகி கருணாநிதியின் இக்குரல் புதியதல்ல. ”முற்போக்கு” வேடமிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தாரின் குரலைத்தான் கருணாநிதி வெளிப்படுத்துகிறார் என்று உறுதியாக நம்பலாம்.

”பிரபாகரன் பாசிஸ்ட். அவர் ஒரு சர்வாதிகாரி”

”ஈழத்தில் சனநாயகம் இல்லை”

”உடனிருந்தவர்களை கொன்றார் பிரபாகரன்”

”பிரபாகரனுக்கு அரசியல் தெரியவில்லை”

”பிரபாகரன் சர்வதேசச் சூழல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை”

இவையெல்லாம் ம.க.இ.க.வினரின் வாதங்கள் தான். இதில் சில வாதங்களை தமிழ்த் துரோகி கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் நாதாரி ஜெகத் கஸ்பர் போன்றவர்களும் கூட உதித்திருக்கிறார்கள்.

ஆக, தமிழகத்தின் ஆளும் வர்க்கக் குரலும், ம.க.இ.க.வினரின் குரலும் ஒன்று தான் என்று எண்ணுகின்ற போது, ம.க.இ.க.வின் ”புரட்சிகர” அரசியலை எண்ணி பயங்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

Labels:

Thursday, October 15, 2009

பாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே

இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாகவும், இந்தியத் தேசியத்தின் ஊதுகுழலாகவும் வலம் வருகின்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ”சர்வதேசியவாதிகள்”, ”தமிழ்த்தேசியம்” மீதான அவதூறுகளை அவ்வப்போது வாந்தி எடுத்து வருகின்றனர். ம.க.இ.க. போன்ற போலித்தனமான, ”முற்போக்கு” வேடமிட்ட ஆளும் வர்க்கக் கைக்கூலிக் கும்பல்களின் இவ்வாறான கூற்றுகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை மேலும் ஒடுக்குவதாய் தான் இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

ஒரு தேசிய இனம், இன ஒடுக்குமுறையின் கீழ் இருக்கும் பொழுது, இரண்டு தீர்வுகளை நாம் முன்வைத்துச் செயல்படலாம். முதலில், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தம்மை ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் துணையுடன், அத்தேசிய அரசைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஓரு புதிய தேசிய அரசை படைக்கலாம். இரண்டாவதாக, ஒடுக்கப்படுகி்ன்ற தேசிய இனம், ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் தேசிய அரசின் கீழ் வாழ விரும்பாத பட்சத்தில், ஒடுக்கப்படும் தேசிய இனம் தமக்கான சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி, தமக்கான புதிய, தனித்த தேசத்தை, தனித் தேசிய அரசை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, ஒடுக்கும் தேசிய இனத்தின் அரசின் கீழிருந்து விடுதலை பெறலாம்.

ஈழத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை அங்கீகரித்துச் செயல்படக்கூடிய, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்களப் பாட்டாளி வர்க்க சக்திகள் வலுவாகவும், வீரியமானதாகவம் இல்லை. சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்குமுறையின் மூர்க்கத்தனங்கள், இதுவரை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வந்திருந்தனவே ஒழிய என்றுமே குறைந்ததில்லை. ஆதலால் தான் ஈழத்தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றிட ”தமிழீழம்” என்ற தனியரசைப் படைப்பது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் குறுந்தேசியவாதம் என்று விமர்சிக்கிறது, ஆளும் வர்க்கத்தின் ஒட்டுக் குழுவான ம.க.இ.க.

ஆரிய பார்ப்பனிய இந்தியாவால், தமிழ்நாடு ஒடுக்கப்படுகின்றது. நேரடியான ஆயுதந்தாங்கிய முறையில் அல்லாமல், தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் நிலவுகின்றது. இவ்வாறான, இன ஒடுக்குமுறை தம்மீது ஏவப்படுகின்றது என்ற விழிப்புணர்வு பெறாத நிலையிலேயே பெரும்பாலான தேசிய இனங்கள் இந்தியாவில் ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன.

காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நேரடி ஆயுதந்தாங்கியப் போராட்டம் நடைபெறுவதால், இந்தியத் தேசிய அரசு அதனை ஆயுதந்தாங்கி ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில், இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தமிழ்த் தேசிய அமைப்புகளால் இந்தியத் தேசியத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. எனவே, தமிழ்த் தேசிய சக்திகளை, தமிழ்த் தேசிய அரசியலை, ஆரிய இனவெறி நாடான இந்தியா ”பிரிவினைவாதம்” என்றும், ”பிராந்தியவாதம்” என்றும் இழிவுபடுத்துகின்றது. ”தமிழ்த் தீவிரவாதம்” என்று மக்களுக்கு அச்சமூட்டுகின்றது. இந்தியத் தேசியத்தைத் திரைக் கிழிப்பது ”நாங்க தானுங்கோ” என்று வாய்ச்சவடால் அடிக்கும், ஆளும் வர்க்கத்தின் துணைப் படையான ம.கஇ.க., இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் குரல்களை மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டு வாந்தி எடுக்கின்றது.

தமிழ்த் தேசியத்தை, ”பிரிவினைவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். ”குறுந்தேசியவாதம்” என்கிறது ம.க.இ.க. ”பிராந்தியவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். ”குறுந்தேசியஇனவெறி” என்கிறது ம.கஇ.க. பார்ப்பன ”இந்து” பத்திரிக்கை, ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்து என்று தமிழகத்தில் போராடிய அமைப்புகளை, ”தமிழ் இனவெறி அமைப்புகள்” என்று மாலினி பார்த்தசாரதி என்ற பார்பன இனவெறியரைக் கொண்டு எழுதியக் கட்டுரையில் வர்ணித்தது. தமிழ் இனத்தின் உரிமையை பேசும் இதே அமைப்புகளை ”இனவாத அமைப்புகள்” என்று “இந்து“வின் குரலிலேயே எழுதியவை தான் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயக, கலாச்சாரப் பத்திரிக்கைகள். என்ன ஒரு ஒற்றுமை!

நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரது பேச்சை எடுத்துக் காட்டி, தமிழ்த் தேசியத்தை பாசிசமாக சித்தரித்திருக்க முயன்றிருக்கிறது, ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிகள் இணையதளம்.

மராட்டிய இன உணர்வைக் கையிலெடுத்த ராஜ்தாக்கரே போன்ற பிற்போக்கு பார்ப்பன பாசிச சக்திகளின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டு இன உணர்வைக் கையிலெடுப்பவர்கள் எல்லோருமே பாசிஸ்டுகள் தான் என்றும் நிறுவ முயல்கிறது ம.க.இ.க. பாசிஸ்ட் கும்பல். அவ்வாறெனில், இன்றைக்கு கம்யுனிசத்தின் பெயரால் சீனாவும், கியுபாவும் இன்னபிற ”கம்யுனிச” நாடுகளும் செயல்படுவதை வைத்து, கம்யுனிஸ்டுகள் அனைவருமே தேசிய இன விடுதலையை “பயங்கரவாதம்“ என்று இழிவுபடுத்தும் பிற்போக்குவாதிகள் தான் என்றால் ம.க.இ.க.வினர் ஏற்றுக் கொள்வார்களா? கம்யுனிசத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் சீனாவில், அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் சனநாயக விரோத அடக்குமுறைகளை ”கம்யுனிசம்” மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறை என்றால் ம.க.இ.க. ஏற்றுக் கொள்ளுமா?

ம.க.இ.க. போன்ற முற்போக்கு வேடமிட்ட, ”இந்திய” வெறி பாசிஸ்டுகள் வேண்டுமானால் இவற்றை கூட அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்வர். ஆனால், மார்க்சியத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்ட உண்மையான தமிழ்த் தேசியர்கள் இவ்வாறான திரிபுவாதங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கோடு, அத்தாயகத்தில் வேற்று இனத்தவர்களை குடியமர்த்திடும் ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது தான் அவ்வினத்தின் தற்காப்பாக இருக்க முடியும். இதைத் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் கூறுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தியத் தேசிய வெறியுட்டலால் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய அளவில் குடியமர்ந்து, ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு உயர்ந்தும் நிற்கின்ற அயல் தேசிய இனத்தார்களை வெளியேற்ற வேண்டும் என்ற் நியாயம் இந்தியத் தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல, முற்போக்கு வேடமிடுகின்ற ம.க.இ.க.வின் பார்ப்பனக் கண்களுக்கும் கூட பாசிசமாகத் தான் தெரிகின்றது. ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கில் ஆளும் வர்க்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்களை எதிர்க்கவேக் கூடாது என்கிறதா ம.க.இ.க.?

”ஆம். எதிர்க்கக்கூடாது தான். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். இங்கு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கட்டும். இவ்வாறான தொடர் வேலைப் பறிப்புகள் மூலம் தான் தமிழ்நாட்டைத் தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மாற்றி, தமிழ்நாட்டில் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்ற நிலையைக் கொண்டு வர முடியும். இவற்றால், தமிழ்நாட்டுத் தமிழன் வேலையிழப்பதைப் பற்றி யெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற அயல் இனத்தாரின் நலன் மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். இங்கு தமிழன் இருந்தால் என்ன வேலையிழந்து செத்தால் என்ன?” என்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். இதனையே வழிமொழிகிறது ம.க.இ.க. இப்படிப்பட்ட ம.க.இ.க. தான் தமிழ்த் தேசியத்தை பாசிசம் என்று உளறித் தள்ளி நடுங்குகின்றது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடாது என்று இப்பொழுது கூக்குரலிடுகின்ற ம.க.இ.க. எப்பொழுதும் போல் இதிலும் இரட்டை வேடதாரிகளாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.

அண்மையில் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகத்தால் ”ஈழம் : ஒரு நேர்மையான மீளாய்வு” என்ற புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அப்புத்தகத்தில், ”ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370-வது சட்டப்பிரிவு இன்னமும் உள்ளது” (பத்தி 1 முடிவில், பக்கம் 20, மேற்கண்ட நூல்) என்று எழுதியிருந்தது பு.ஜ.

அதாவது, ”ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும்” என்று பு.ஜ.வும் ம.க.இ.க.வும் நன்கு உணர்ந்திருப்பதாகவும் சொல்கின்றது. மேலும் இந்திய ஆளும் வர்க்கம தான், இந்தி பேசும் மக்களை காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் குடியமர்த்துவதாகவும் பு.ஜ. கூறுகின்றது. இவற்றிலிருந்து, காசுமீர், வடகிழக்குப் பகுதிகளில் எழுகின்ற தேசிய இன சுயநிர்ணய உரிமைக் குரல்களை முடக்க, அத்தேசிய இனங்களின் தாயகங்களைப் பறித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வருவதை ம.க.இ.க. நன்கு அறிந்தும் வைத்திருக்கிறது.

தற்பொழுது தமிழ்நாட்டில், இந்தி பேசுபவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுதல், கட்டுமானப் பணிகளில் அயல் தேசிய இனத்தவர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படுதல், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நிலங்கள் வாங்குவதிலும், விற்பதிலும், குடியேறுவதிலும் அயல் மாநிலத்தவர்கள் ஆதிக்கம், வட்டித் தொழில், ஆன்லைன் வணிகம், மஞ்சள் வணிகம், துணி விற்பனை, திரைத் தறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அயல் தேசிய இனத்தவர்கள் ஆதிக்கம் என தமிழ்நாடு வேகமாக தம் தனித்தன்மையை இழந்து, தமிழ்நாட்டு நகரங்கள் தமிழர்களுக்கே அந்நியமயமாகி வருகின்ற சூழலைக் காண்கிறோம். சென்னையில் பல அப்பார்ட்மண்ட்களில் தமிழர்கள் உள்ளே சென்று வரக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மெல்ல அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கக் கோட்டையாக மாறி வருகின்றது.

மேலும், ஈழத்தில் அண்மையில் நடைபெற்ற போர் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வையும், தாம் வாழும் இந்நாடு நம்முடையது தானா என்ற கேள்வியையும் பலமாக எழுப்பியுள்ளது. இவ்வுணர்வலைகளை முனை மழுங்கச் செய்ய வேண்டுமென இந்திய ஆளும் வர்க்கம் விரும்புவதாலேயே இந்திய அரசு இவ்வாறான அயல் தேசிய இனத்தவர் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது. இதனைக் கண்டித்து தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், நாம் தமிழர் இயக்கமும் குரல் கொடுக்கின்றன. குற்றம் சாட்டுகின்றன. இதிலென்ன தவறு கண்டது ம.கஇ.க.?

காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அங்கு வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவது தடை விதிக்கப்பட்டது என்று கூறுகின்ற ம.க.இ.க., காசுமீர் மக்களின் போராட்டம் போல தமிழ்நாட்டில் மக்கள் போராடக் கூடாது என்று தான் விரும்புகிறது. அதனால் தான் அயல் தேசிய இனத்தாரரின் ஆக்கிரமிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் மாற்றி மாற்றிக் குரல் கொடுத்து முழுவதுமாக அம்பலப்பட்டு நிற்கிறது ம.க.இ.க.

காசுமீரைப் போல தமிழ்நாட்டில் குரல்கள் எழந்தால் அதனை மட்டும் ”பாசிசம்” என்று புளுகி ம.க.இ.க. வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் தமிழ்த் தேசியத் தாயகப் பறிப்புத் திட்டத்திற்கு துணைபோவது ஏன்? தமிழ்நாட்டை ஆக்கிரமித்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் மார்வாடி குசராத்தி சேட்டுகள் குறித்து நீங்கள் என்றாவது வாய்த் திறந்திருக்கிறீரா? இது குறித்து ம.க.இ.க. வின் விமர்சனம் என்ன? காசுமீருக்கும் வடகிழக்கு தேசிய இனங்களுக்கும் ஒரு நீதி, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு நீதியா? இது தானே ம.க.இ.க.வின் ”மனுநீதி”. இதனால் தானே நாங்கள் ம.க.இ.க.வை பச்சைப் பார்ப்பனியக் கட்சி என்கிறோம்.

சிங்கள இனவெறி அரசு தமிழ் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் குடியமர்த்தப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். காசுமீரில் இந்தி பேசுபவர்கள் குடியேற்றப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். ஆனால், தாம் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசத்தில் மார்வாடி, வந்தால் என்ன குசராத்தி வந்தால் என்ன, அவர்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் தானே என்று பேசுமாம். ம.க.இ.க.வின் ”மனுநீதி”ப் பார்வை அப்பட்டமாக சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வந்தேறிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இதுவரை ம.க.இ.க. என்னென்னப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது? ம.க.இ.க.வில் உள்ள தமிழர்கள் இக்கேள்வியை ஏன் அதன் தலைமைக்கு எழுப்பவில்லை?

உலகிலேயே பெரிய சனநாயகவாதி போலும், முற்போக்குவாதி போலவும் வேடமிடுகின்ற ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக் கொண்ட அமைப்பு தான் என்பது பலருக்குத் தெரியாது. இதோ அது குறித்த தகவல்....

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ”வெளியாரை வெளியேற்றுவோம்!” என்ற மாநாடு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வணிகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட அயல் தேசிய இனத்தாரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு நடக்கக் கூடாதென முட்டி மோதிக் கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர் பார்ப்பன பாசிஸ்டுகளாக பா.ச.க.வினர்.

ஏனெனில், இம்மாநாட்டின் நோக்கமே, அவர்கள் கட்டி அழுது கொண்டிருக்கிற பார்ப்பன பனியாக்களின் பாசிச இந்தியாவிற்கு வெடி வைப்பதாக இருந்தது. பார்ப்பனர்களின் மலக்கழிவான தினமல(ம்)ர் நாளேடு அலறித் துடித்தது. மாநாட்டை இழிவு படுத்தி செய்தி வெளியிட்டுத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. இந்து - இந்தி - இந்தியத் தேசியத்திற்கு உலை வைக்கும் இம்மாநாட்டிற்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகளான தினமல(ம்)ரும் பா.ச.க.வும் எப்படி துடித்தனவோ, அதே அளவில் துடித்தவர்கள் தான் ம.க.இ.க.வினர். ம.க.இ.க.வினரால் ”ஓடுகாலிகள்” என்று விமர்சிக்கப்படும், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியினரும், இச்சமயத்தில் ம.க.இ.க.வினருடன் இணைந்து கொண்டு வேலை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இம்மாநாட்டிற்கு எதிராக செய்த பெரும் ”புரட்சிகர” நடவடிக்கை என்ன தெரியுமா?

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குழுமியிருந்த தோழர்களிடம் போய் ”தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு இனவெறிக் கட்சி. வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கட்சி. எனவே அதிலிருந்து வெளியேறுங்கள்” என்ற பாணியில் ஒரு துண்டறிக்கை கொடுத்தனர், இந்தப் ”புரட்சி”யாளர்கள்.

அத்துண்டறிக்கையில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? அயல் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், தமிழ்த் தேசிய இன உழைக்கும் மக்களும் இணைந்து சர்வதேசியப் புரட்சி பற்றி தான் பேச வேண்டுமாம். ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனத்தின் உரிமைகளை அபகரிப்பதைப் பற்றிப் பேசினால் அது வர்க்க ஒற்றுமைக்கு பின்னடைவை ஏற்படுத்துமாம். அடேங்கப்பா..! இவர்களின் ”சர்வதேசிய”க் கண்ணோட்டத்தை பார்த்து நமக்கு சிரிப்புத் தான் வருகின்றது.

”மார்வாடியும் குசராத்தியும் இந்தியர்கள் தானே” என்று பார்ப்பன பனியாக்கள் எழுப்பும் குரலுக்கு, மார்க்சிய சாயமடித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கொண்டு அதற்கு மேக் அப் போட்டு வந்து நிறுத்தியது, ம.க.இ.க.வும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியும். மார்க்சியத்தை வெறும் வறட்டுவாத சூத்தரமாக கருதுகின்ற மனோபாவமும், தான் சார்ந்து நிற்கின்ற இந்தியத் தேசியக் கருத்தியலும் தான் ம.கஇ.க. போன்ற மார்க்சிய லெனினியக் குழுக்களை வழிநடத்துகின்றது. இதனால் தான், இக்குழுக்கள் மார்கசியம் வலியுறுத்துகின்ற உண்மையான சர்வதேசியத்தை மூடி மறைத்துக் கொண்டு, புதியதொரு கற்பனாவாத சர்வதேசியக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றனர். பார்ப்பன இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களின் வேலைகளை பிடுங்கிக் கொள்ளும் பொருட்டு செயல்படுகின்ற அயல் தேசிய இனங்களுக்கு முதலில் இவர்கள் சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுக்கட்டும்.

ம.க.இ.க.வினர் ”மார்வாடிகள் தமிழகத்தில் தொழில்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையோ அந்த ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதையோ நாங்கள் மறுக்கவில்லை” என்றும் தாம் வெளியிட்ட அத்துண்டறிக்கையில் எழுதியிருந்தனர். அதாவது அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கத்தை இவர்கள் மறுக்கவில்லை என்பார்களாம். அதே ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினால் அதை பாசிசம் என்பார்களாம். என்ன ஒரு நியாயம்...! ”மனுநீதி” நியாயம்!

ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்ற ஓட்டுப் பொறுக்கி சந்தர்ப்பவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல ம.க.இ.க.வினர் என்பதனை இச்செய்திகள் அம்பலப்படுத்துகின்றன.

கலப்பு மணங்கள் சாதியை ஒழித்துக் கட்டுமாம். கலப்பு இனங்கள் இனத்தை ஒழித்துக் கட்டுமாம். சர்வதேசியவாதி எழுதித் தீர்த்திருக்கிறார். எப்பேர்பட்ட அறிவியல் ரீதியான ஆய்வு. ஒருவனுக்கு கீழ் இன்னொருவன் அடிமைப்பட்டே கிடக்க வேண்டும் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலான சாதியும், தமக்கென தனித்த பண்பாடு, வரலாறு, மொழி கொண்ட ஓர் தேசிய இனமும் ஒன்றாம், ம.க.இ.க.வினர் பாடமெடுத்திருக்கின்றனர். அப்படியெனில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்று ம.க.இ.க.வினரின் அலறல்களைப் போல, சாதிய சுயநிர்ணய உரிமைகளையும் இவர்கள் அங்கீகரிப்பார்கள் போலும். சாதியைப் போலவே இனமும் ஓர் ஒடுக்குமுறைக் கருத்தியல் என்று மார்க்சிய வேடமிட்டுக் கொண்டு எழுதுகின்ற ம.க.இ.க. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடாலுக்குத் தானா? உங்களது அணித் தோழர்களை தேற்றி வைப்பவதற்காக மட்டும் தானா?

மார்க்சியத்தை முன்னிறுத்திக் கொண்டு, போலி வேடந்தரித்து நிற்கின்ற ம.க.இ.க. போன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்புகளை, முற்போக்கு வேடமிட்ட ”இந்திய” வெறி பாசிஸ்டுகளை தமிழ்த் தேசியர்கள், உணர்வாளர்கள் புறந்தள்ள வேண்டும். ம.க.இ.க. போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். பாசிசத்தை நோக்கி பயணமெடுப்பது தமிழ்த் தேசியமல்ல, ம.க.இ.க. போன்ற ஆரிய ”இந்திய” வெறி அமைப்புகளே என்று உணர வேண்டும்.

Labels: